AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கண்ணை பறிக்கும் கனிகளின் சங்கமம்.. குன்னூரில் நாளை தொடங்குகிறது பழக்கண்காட்சி.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

Coonoor Sims Park Fruit Exhibition: நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாளை பல்வேறு வகையான பழ கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியானது வருகிற மே 30- ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறுகிறது.

Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 May 2026 13:53 PM IST
தமிழகத்தில்  தற்போது  கோடை காலம் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை என்பதால்  ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களில் குவிந்து வருகின்றனர்.  அந்த வகையில்,  நீலகிரி மாவட்டத்தில்  ஏராளமான சுற்றுலா பயணிகள்  குவிந்திருந்து  சுற்றி பார்த்து வருகின்றனர்.  இந்த சுற்றுலா பயணிகளை மேலும் மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி,  ரோஜா கண்காட்சி,  பழவகை கண்காட்சி,  வாசனை திரவிய கண்காட்சி மற்றும் படகு அணிவகுப்பு போட்டிகள் உள்ளிட்டவை  நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தற்போது கோடை காலம் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களில் குவிந்து வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்து சுற்றி பார்த்து வருகின்றனர். இந்த சுற்றுலா பயணிகளை மேலும் மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழவகை கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி மற்றும் படகு அணிவகுப்பு போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.

1 / 5
இந்த நிலையில்,  குன்னூர்  சிம்ஸ் பூங்காவில் தோட்டக் கலைத்துறை சார்பில் நாளை  புதன்கிழமை (  மே 27- ஆம் தேதி)  பழ  கண்காட்சி  தொடங்க உள்ளது.  இதில்,  பல்வேறு வகையான  வண்ண மலர்களால்   வன விலங்குகளான  யானை, பெரிய வகை டைனோசர், சிறிய வகை டைனோசர், டைனோசர் முட்டை,  ஒட்டகம்,  கொரில்லா குரங்கு,  முதலை,  நாரை,  கொக்கு, வாத்துகள்  உள்ளிட்ட  உருவங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தோட்டக் கலைத்துறை சார்பில் நாளை புதன்கிழமை ( மே 27- ஆம் தேதி) பழ கண்காட்சி தொடங்க உள்ளது. இதில், பல்வேறு வகையான வண்ண மலர்களால் வன விலங்குகளான யானை, பெரிய வகை டைனோசர், சிறிய வகை டைனோசர், டைனோசர் முட்டை, ஒட்டகம், கொரில்லா குரங்கு, முதலை, நாரை, கொக்கு, வாத்துகள் உள்ளிட்ட உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2 / 5
இதே போல, பல்வேறு வகையான பழ வகைகளால்  உயிரினங்களின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த உருவங்கள் அனைத்தும்  சுற்றுலா பயணிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வகையிலான வண்ண வண்ண மலர்கள் வளர்க்கப்பட்டு கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இங்கு தயார் செய்யப்படும் பல்வேறு வடிவமைப்புகளை  காட்சிப்படுத்துவதற்காக தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த கண்காட்சியானது  வருகிற மே 30- ஆம் தேதி (  சனிக்கிழமை)  வரை நடைபெற உள்ளது.

இதே போல, பல்வேறு வகையான பழ வகைகளால் உயிரினங்களின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உருவங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வகையிலான வண்ண வண்ண மலர்கள் வளர்க்கப்பட்டு கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இங்கு தயார் செய்யப்படும் பல்வேறு வடிவமைப்புகளை காட்சிப்படுத்துவதற்காக தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியானது வருகிற மே 30- ஆம் தேதி ( சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

3 / 5
ஏற்கனவே  ஊட்டி ரோஜா பூங்காவில்  கடந்த மே 14- ஆம் தேதி  முதல் 18-  ஆம் தேதி வரை  ரோஜா கண்காட்சி நடைபெற்றது.  இதை தொடர்ந்து,  காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி நடத்தப்பட்டது.  மேலும்,  ஊட்டி  அரசு தாவரவியல் பூங்காவில் 128-  ஆவது மலர் கண்காட்சி  நடத்தப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக  தற்போது குன்னூர் சிம்ஸ்  பூங்காவில் 66-  ஆவது மலர்கள் மற்றும் பழ வகைகள்  கண்காட்சி  தொடங்கி நடைபெற உள்ளது.

ஏற்கனவே ஊட்டி ரோஜா பூங்காவில் கடந்த மே 14- ஆம் தேதி முதல் 18- ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து, காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. மேலும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 128- ஆவது மலர் கண்காட்சி நடத்தப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக தற்போது குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66- ஆவது மலர்கள் மற்றும் பழ வகைகள் கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது.

4 / 5
சுமார் 4  நாட்கள் நடைபெறும் இந்த பழ  கண்காட்சியை  சுற்றுலா பயணிகளும்,  பொதுமக்களும்  கண்டு களித்து  மகிழலாம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பழ கண்காட்சிக்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக நீலகிரி  மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி  பவ்யா  தண்ணீரு  தெரிவித்துள்ளார். நீலகிரியில் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த பழ கண்காட்சியை கண்டு கழிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குன்னூருக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால், சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் தலைகள் தென்பட்ட வண்ணாக உள்ளது.

சுமார் 4 நாட்கள் நடைபெறும் இந்த பழ கண்காட்சியை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கண்டு களித்து மகிழலாம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பழ கண்காட்சிக்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். நீலகிரியில் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த பழ கண்காட்சியை கண்டு கழிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குன்னூருக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால், சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் தலைகள் தென்பட்ட வண்ணாக உள்ளது.

5 / 5
Follow Us