நியாபக மறதி பிரச்னையா? இந்த ஜப்பானிய பயிற்சிகளை டிரை பண்ணுங்க!
Japanese Memory Secrets : மக்களிடையே நினைவாற்றல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்மோன் பயன்பாடு, மன அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக மக்களால் சிறிய விஷயங்களைக் கூட எளிதில் நினைவில் வைத்திருக்க முடியவில்லை. இந்த கட்டுரையில் ஜப்பானிய முறைகளைப் பயன்படுத்தி எப்படி நினைவாற்றலை வளர்க்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

மறதி ஒரு தேசிய வியாதி என கமல்ஹாசன் (Kamal Haasan) சொல்வது போல, சிறிய விஷயங்களைக் கூட மறக்கும் அளவுக்கு மக்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருகிறது. சமீப காலமாக பணி அழுத்தம், ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்திருப்பது ஆகியவற்றின் காரணமாக இளைஞர்களிடையே நியாபக மறதி அதிகரித்திருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய மறதி பல நேரங்களில் பெரும் சிக்கல்களில் கொண்டு விடும். நமது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க புதிர் போன்ற சில எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக ஜப்பானிய பயிற்சி முறைகள் நமது நினைவுத் திறனை மேம்படுத்த சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. ஜப்பானிய போர் வீரர்களான சாமுராய்கள் இந்த பயிற்சி முறையை அதிகம் பின்பற்றியிருக்கிறார்கள். தற்போது இது இந்தியர்களிடையே பிரபலமடைந்து வருகிறது. இந்த கட்டுரையில் ஜப்பானிய முறைகளை பயன்படுத்தி எப்படி நினைவாற்றலை அதிகரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
கான் சட்சு (Kansatsu)
இந்த முறை ஜப்பானில் துறவிகள் மற்றும் கலைஞர்களால் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. கான் சட்சுவோ என்றால் உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை அமைதியாகக் கவனிப்பது. நாம் எதுவும் சொல்லாமல் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கவனித்தால், மூளை நேர்மறையாக பதிலளிக்கிறது. எல்லாவற்றையும் கவனமாக நினைவில் கொள்ளும் பயிற்சியை மூளை பெறுகிறது. கலைகளில் ஈடுபடுபவர்களிடம் அதிகம் கடைபிடிக்கும் முறை. இது ஒரு வகையான நினைவாற்றல் நுட்பமாகும்.
ஷிசா கன்கோ (Shisa Kanko)
ஷிசா கான்கோ என்றால் எதையாவது சுட்டிக்காட்டி சத்தமாகப் பேசுவது. அதாவது உடலையும் மூளையையும் ஒன்றிணைத்துச் செயல்பட வைக்கும் வார்த்தைகளைப் பேசுவது. இதன் பொருள் நமது கவனம் முழுவதும் அந்த விஷயத்தில்தான் உள்ளது. இந்தக் கொள்கை ஜப்பானில் ரயில் ஆபரேட்டர்களால் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
நிகான் (Nikkan)
காலம் செல்லச் செல்ல நம் நினைவாற்றல் குறைந்து வருவதாக நாம் நினைக்கிறோம். இருப்பினும், ஜப்பானியர்கள் நிகான் என்ற கொள்கையைப் பின்பற்றுகிறார்கள், அங்கு அவர்கள் பழைய நினைவுகளை மௌனத்தின் மூலம் நினைவுகூர முயற்சிக்கிறார்கள். அமைதியான சூழ்நிலையில் அமர்ந்திருப்பதன் மூலம் பழைய நினைவுகளை மீட்டெடுக்க முயற்சிக்கிறார்கள். நாம் கடன் கொடுத்தவர்கள், நாம் கடன் வாங்கியவர்கள் உள்ளிட்டவை குறித்து சிந்தித்தால் மூளை வலுப்படும் என்பது அவர்களது நம்பிக்கை.
சிசோகு (Chisoku)
சிசோகு என்று அழைக்கப்படும் இந்த முறையில், நாம் நிகழ்காலத்தை மறந்து, தொடர்ந்து இலக்குகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று கூறப்படுகிறது. நம்மிடம் இருப்பது இந்த நொடி மட்டும்தான். அதில் முழுமையாக கவனம் செலுத்துவது உங்கள் நினைவாற்றலை மேம்படுத்தும். இதன் பொருள், எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல், கையில் இருக்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டும். இது நமது மனநிலையை அமைதியாக வைத்திருக்கும்.
கியோ (Gyo)
கியோ என்றால் ஒரே பணியில் முழுமையாக ஈடுபடுவது. உதாரணமாக, வீட்டை சுத்தம் செய்தல், பொருட்களை ஒழுங்காக ஒழுங்குபடுத்துதல் போன்ற எளிய பணிகள் கூட நம் மனதை நிலையாக வைத்திருக்க உதவும். இது நமது மூளையை கடினமாக உழைக்க வைக்கிறது. இதன் விளைவாக, நினைவாற்றல் பலப்படுத்தப்படுகிறது.
கோடோடமா (Kotodama)
ஜப்பானியர்கள் நம்பும் மற்றொரு சக்திவாய்ந்த நுட்பம் கோட்டோடமா ஆகும். இது ஒரு சொல் அல்லது வாக்கியத்தை மீண்டும் மீண்டும் கூறுவதாகும். இது அந்த வார்த்தையை நம் மூளையில் நிலைநிறுத்துகிறது. மாணவர்கள் அல்லது பேச்சாளர்கள் தங்கள் நினைவாற்றலை மேம்படுத்த இந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள்.
உகெடோமௌ (Uketamo)
உகெட்டாமோவின் இந்தக் கருத்து டோஹோகு என்ற ஜப்பானிய மதப் பிரிவிலிருந்து வந்தது. இதன் பொருள் நான் அதை நேர்மையாக ஏற்றுக்கொள்வேன். நாம் எந்த ஒரு பிரச்சினையையும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டால், நாம் மனதளவில் நிலையாக இருக்க முடியும், அப்போது நமது உணர்ச்சிகள் கட்டுக்குள் இருக்கும் என்று இது கூறுகிறது.
உங்கள் நினைவாற்றலை வலுப்படுத்தவும், மறதியைக் குறைக்கவும் விரும்பினால், ஜப்பானியர்கள் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றி வரும் இந்த முறைகளை பின்பற்றலாம். இவை நிச்சயமாக உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். மேலும் நீங்கள் மறந்து போகும் விஷயங்களை நினைவில் வைக்க உதவும்.