AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மம்தா பானர்ஜி வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி சோதனை.. என்ன காரணம்.. முழு விவரம் உள்ளே!

Mamata Banerjee Resident SIT Search : மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களிடம் போலி கையெழுத்து பெற்றதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்புடைய இடங்களில் எஸ்ஐடி குழு சோதனை மேற்கொண்டது.

மம்தா பானர்ஜி வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிரடி சோதனை.. என்ன காரணம்.. முழு விவரம் உள்ளே!
மம்தா பானர்ஜி வீட்டில் எஸ்ஐடி குழு அதிரடி சோதனை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 09 Jun 2026 20:29 PM IST

மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது சுமத்தப்பட்ட கையெழுத்து போலி வழக்கு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக சிஐடி குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை கல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்துக்கு சோதனை நடத்த சென்றனர். மாநில புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் காளிகட் காவல் நிலைய போலீசார் மற்றும் பெண் காவலர்கள் குழுவானது ஹரிஷ் சாட்டர்ஜி தெருவில் உள்ள மத்திய அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டது. எதிர்க்கட்சி தலைவர் அங்கீகரிப்பதற்கான சட்டமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களை போலியாக பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான தகவல்கள் கோரி குற்றப்புலனாய்வு துறை நோட்டீஸ் அனுப்பிய சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திரிணாமூல் கட்சி எம்எல்ஏக்கள் போலி கையெழுத்து

இந்த சம்பவ இடத்தில் ஈடுபட்ட சிஐடி அதிகாரிகள் கூறுகையில் இந்த அமைப்பு முன்னதாக அனுப்பிய நோட்டீசுக்கு திரிணாமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி அளித்த பதிலின் அடிப்படையில் இந்த சோதனை கூறப்பட்டதாக தெரிவித்தார். தனது பதிலில் 30 “பி” ஹரிஷ் சாட்டர்ஜி தெருவில் உள்ள கட்சியின் மத்திய அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணையின் ஒரு பகுதியாக நாங்கள் சோதனை மேற்கொள்வதாக சிஐடி அதிகாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க: 39 மனைவிகள், 94 பிள்ளைகள்.. இந்தியாவை சேர்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பம்!

அபிஷேக் பானர்ஜிக்கு புலனாய்வு அமைப்பு கடிதம்

மம்தா பானர்ஜியுடன் புதுடில்லியில் இருக்கும் அபிஷேக் பானர்ஜிக்கு இந்த வழக்கு தொடர்பாக செவ்வாய்க்கிழமை மாலை ஆஜராகுமாறு சிஐடியால் சமன் அனுப்பப்பட்டிருந்தது. விசாரணை குழுவினர் வளாகத்துக்குள் நுழைய முடிந்த போது பாதுகாப்பு பணியில் இருந்த பணியாளர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுபாஷிஷ் சக்கரவர்த்தி அபிஷேக் பானர்ஜி இல்லாத நிலையில் எந்த ஒரு சோதனையும் மேற்கொள்ளக்கூடாது என்று தெரிவித்திருந்தனர்.

அலுவலகம், வீட்டில் எஸ்ஐடி குழு அதிரடி சோதனை

அபிஷேக் பானர்ஜி இல்லாத நிலையில் புலனாய்வு குழு வளாகத்துக்குள் நுழைய நாங்கள் அனுமதிக்கவில்லை என்றும், அவர் வந்ததும் வீட்டை சோதனை செய்யலாம் என்று சக்கரவர்த்தி தெரிவித்தார். இருப்பினும் குற்றப் புலனாய்வுத் துறை பெரும் படையுடன் வளாகத்துக்குள் நுழைந்தது. இதனை தொடர்ந்து சிஐடி குழுவினர் குடியிருப்பு மற்றும் அலுவலகம் இணைந்த அந்த வளாகத்துக்குள் நுழைந்து தேடுதல் மற்றும் ஆவண சரிபார்ப்பு பணியை தொடங்கி நடத்தியது. இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க: LPG சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு.. புதிய விதிகளை வெளியிட்ட மத்திய அரசு!

Follow Us