ரயில் பயணிகளுக்கு ஷாக்.. டிசம்பர் 26 ஆம் தேதி முதல் உயரப்போகும் டிக்கெட் விலை..
Railway Ticket Fare: வரக்கூடிய டிசம்பர் 26 முதல் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே கட்டண உயர்வை அமல்படுத்துவதன் மூலம், ரயில் டிக்கெட் விலைகள் 26ஆம் தேதி முதல் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் தொலைதூரப் பயணங்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வரக்கூடிய டிசம்பர் 26 முதல் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே கட்டண உயர்வை அமல்படுத்துவதன் மூலம், ரயில் டிக்கெட் விலைகள் 26ஆம் தேதி முதல் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புறநகர் ரயில் பயணத்திற்கான கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்றாலும், தொலைதூரப் பயணங்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எத்தனை கி.மீக்கு எவ்வளவு உயர்வு?
கட்டண மாற்றத்தின் மூலம் சுமார் 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று ரயில்வே எதிர்பார்க்கிறது. இந்த உயர்வு முக்கியமாக நீண்ட தூர பயணிகள் மற்றும் ஏசி வகுப்புகளில் பயணிப்பவர்களை பாதிக்கும். 215 கிமீ (கிமீ) வரையிலான பொது வகுப்பு டிக்கெட்டுகளின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. இருப்பினும், சாதாரண வகுப்புகளில் 215 கிமீக்கு மேல் பயணங்களுக்கு, ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா வசூலிக்கப்படும். ஏசி முதல் வகுப்பு, இரண்டாம் ஏசி, மூன்றாம் ஏசி மற்றும் ஏசி சேர் கார் உள்ளிட்ட அனைத்து ஏசி வகுப்புகளிலும் கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வந்தே பாரத், ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களுக்கும் பொருந்தும்.
உதாரணமாக, ஏசி இல்லாத பெட்டியில் 500 கி.மீ பயணம் செய்பவர் கூடுதலாக ரூ.10 மட்டுமே செலுத்த வேண்டும். இதற்கிடையில், புறநகர் ரயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு (எம்எஸ்டி) கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது வழக்கமான பயணிகளுக்கு ஒரு பெரிய நிவாரணமாகும்.
எதற்காக இந்த கட்டண உயர்வு?
ரயில்வேயின் இயக்கச் செலவுகள் பெருமளவில் அதிகரித்ததன் காரணமாக டிக்கெட் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2024-25 நிதியாண்டில் ரயில்வேயின் மொத்த இயக்கச் செலவுகள் ரூ.2,63,000 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது, ஊழியர்களின் சம்பளத்திற்கு மட்டும் ரயில்வே ரூ.1,15,000 கோடியை செலவிடுகிறது.
கூடுதலாக, ஓய்வூதியத்திற்காக ரூ.60,000 கோடி செலவிடப்படுகிறது. இந்த கூடுதல் சுமையை சமாளிக்க சரக்கு போக்குவரத்தை அதிகரித்து, கட்டணங்களில் சிறிய மாற்றங்களைச் செய்துள்ளதாக ரயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் ரயில்வே கட்டணங்களை உயர்த்தியது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் குளிர்சாதன வசதி இல்லாத வகுப்புகளுக்கான கட்டணம் ஒரு கி.மீ.க்கு 1 பைசாவும், குளிர்சாதன வசதி கொண்ட வகுப்புகளுக்கான பயணம் ஒரு கி.மீ.க்கு 2 பைசாவும் அதிகரித்தது.
அதற்கு முன்பு, ஜனவரி 1, 2020 அன்று ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டில், சாதாரண மற்றும் மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான இரண்டாம் வகுப்பு கட்டணம் முறையே 1 பைசா/கிமீ மற்றும் 2 பைசா/கிமீ அதிகரித்தது. ஸ்லீப்பர் வகுப்புகள் மற்றும் அனைத்து ஏசி வகுப்புகளுக்கான கட்டணம் முறையே 2 பைசா/கிமீ மற்றும் 4 பைசா/கிமீ அதிகரித்தது.