இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – டிரம்ப் முக்கிய அறிவிப்பு
PM Modi ச மோடி ஒரு நெருங்கிய நண்பர் என்றும், அமெரிக்கா எப்போதும் இந்தியாவுக்குத் துணையாக நிற்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று அறிவித்தார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமையவுள்ளது என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் பிரான்சில் தனிப்பட்ட முறையில் சந்தித்தனர். இது கடந்த 16 மாதங்களில் அவர்களின் முதல் சந்திப்பாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் புதுப்பிப்பதில் முக்கிய கவனம் செலுத்தி, அவர்கள் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர்.
இந்நிகழ்வில் டிரம்ப் குறித்து பேசிய பிரதமர் மோடி, உங்களைச் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆண்டு வாஷிங்டனில் நாம் சந்தித்ததிலிருந்து, நமது நாடுகளுக்கு இடையிலான பிணைப்பு புதிய உத்வேகத்தையும் ஆற்றலையும் பெற்றுள்ளது. நாம் நிர்ணயித்துள்ள இலக்குகளை அடைய நமது குழுக்கள் மிக வேகமாகப் பணியாற்றி வருகின்றன,” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அமெரிக்க அதிபர் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு
“Keeping Strait of Hormuz open is vital for global economy”: PM Modi tells Trump during meeting
Read @ANI Story | https://t.co/SViB2vX0Gv#India #PMModi #StraitofHormuz #GlobalEconomy #UnitedStates #Trump #G7Summit #France pic.twitter.com/Z9P3JPrNz7
— ANI Digital (@ani_digital) June 17, 2026
வர்த்தக ஒப்பந்தம்
இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் வர்த்தகச் சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படவுள்ளன என்பதை இச்சந்திப்பு தெளிவுபடுத்தியது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாக இரு தரப்பினரும் தெரிவித்தனர். இதற்குச் சாதகமாகப் பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “நாங்கள் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளைச் செய்து வருகிறோம். பிரதமர் மோடி எங்கள் நெருங்கிய நண்பர். அமெரிக்கா எப்போதும் இந்தியாவுக்குத் துணையாக நிற்கும்,” என்று கூறினார்.
ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் மோடியின் முக்கிய கருத்துகள்
மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பிரதமர் மோடி பாராட்டினார். அதே வேளையில், உலகளாவிய கடல்சார் பணியாளர்களில் இந்தியர்கள் ஏறக்குறைய 10 சதவீதம் பேர் உள்ளனர் என்பதைக் குறிப்பிட்ட மோடி, அவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையையும் வெளிப்படுத்தினார். சமீபத்திய தாக்குதல்களின் பின்னணியில், ஹார்முஸ் நீரிணையை முழுமையாகத் திறந்து வைப்பது உலக வர்த்தகத்திற்குப் பெரிதும் பயனளிக்கும் என்று அவர் வலியுறுத்தினார். ஹார்முஸ் பிராந்தியத்தில் எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது என்றும், சர்வதேசக் கடல்சார் போக்குவரத்து தடையின்றி நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.