எல்பிஜி உற்பத்தி 30% அதிகரிப்பு – அவசரமாக கேஸ் புக் செய்ய தேவையில்லை – மத்திய அரசு அறிவிப்பு
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படலாம் என தகவல்கள் பரவி வரும் நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாதிரி புகைப்படம்
ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படலாம் என தகவல்கள் பரவி வரும் நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி எல்பிஜி சிலிண்டர் உள்நாட்டு உற்பத்தி கடந்த மார்ச் 5, 2026 அன்றை விட, 30 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நாட்டில் எல்பிஜி விநியோகம் தடையின்றி நடக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அவசரமாக கேஸ் புக் செய்ய தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த தகவல் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us