Mumbai Train Tragedy : மும்பையில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த பொதுமக்கள்.. தவறி விழுந்து 5 பேர் பலி!

5 Dead After Falling From Crowded Train in Mumbai | மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கூட்ட நெரிசல் மிகுந்த ரயிலில் படிக்கட்டில் பயணித்த பொதுமக்கள் 10 பேர் தவறி கீழே விழுந்த நிலையில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mumbai Train Tragedy : மும்பையில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த பொதுமக்கள்.. தவறி விழுந்து 5 பேர் பலி!

மும்பை ரயில் விபத்து

Updated On: 

09 Jun 2025 18:42 PM

மும்பை, ஜுன் 08 : மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலம் மும்பையில் (Mumbai) ரயில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்த நிலையில், 5 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக பொதுமக்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்த நிலையில், இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், படிக்கட்டில் பயணம் செய்த பொதுமக்கள் தவறி விழுந்து உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுமக்களின் பிரதான போக்குவரத்து சேவையாக உள்ள ரயில்கள்

இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்து தேவையாக ரயில்கள் உள்ளன. ரயில்களில் குறைந்த கட்டணத்தில் மிக விரைவாக பயணம் செய்ய முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இவ்வாறு, பலரும் ஒரே நேரத்தில் ரயில்களில் பயணிக்கும் நிலையில் ரயில்கள் கூட்ட நெரிசலுடன் காணப்படுகின்றன. அந்த வகையில், மும்பையில் கூட்ட நெரிசல் மிகுந்த ரயிலில் பயணம் செய்த நிலையில், ஐந்து பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.

ரயிலில் படிக்கட்டில் தொங்கிய 5 பேர் தவறி விழுந்து பலி

மும்பை மிகவும் கூட்ட நெரிசல் மிகுந்த நகரம் என்பதால் எங்கு எப்போதும் ரயில்கள் மிகவும் கூட்ட நெரிசலுடன் காணப்படும். அதிலும் அலுவலக நேரங்களில் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், இன்று (ஜூன் 09, 2025) காலை தானே ரயில் நிலையத்தில் இருந்து மும்பை ரயில் நிலையத்திற்கு புறநகர் ரயில் ஒன்று சென்றுக்கொண்டு இருந்துள்ளது. ரயில் பெட்டிகளில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் இருந்த நிலையில், சிலர் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், தானேவை அடுத்த மும்ப்ரா பகுதியில் ரயில் சென்றுக்கொண்டு இருந்த போது, படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த 10 பேர் தவறி கீழே விழுந்துள்ளனர். அவர்களின் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்து விளக்கம் அளித்த எம்.பி

இது குறித்து கூறியுள்ள சிவ சேனா எம்.பி, ஸ்ரீகாந்த் ஷிண்டே ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.