PM Modi on Emergency: இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயம்.. எமர்ஜென்சியை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!
50 Years of Emergency: 1975 ஜூன் 25ம் தேதி அமல்படுத்தப்பட்ட அவசரநிலையின் 50வது ஆண்டு நிறைவையொட்டி, பிரதமர் மோடி காங்கிரஸின் செயல்பாடுகளை கண்டித்துள்ளார். இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் எனக் குறிப்பிட்ட அவர், அடிப்படை உரிமைகள் பறிப்பு, பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தின் அனுபவம் தனக்குக் கற்றுத் தந்த பாடங்களை பகிர்ந்துகொண்ட அவர், இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி
டெல்லி, ஜூன் 25: 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி இந்தியா முழுவதும் அவசரநிலை (Emergency) அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி (PM Narendra Modi) காங்கிரஸ் (Congress) மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தியாவில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட இன்று அதாவது 2025 ஜூன் 25ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, பிரதமர் மோடி தனது சமூக வலைதளங்களில் இது இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகும். இந்திய மக்கள் இந்த நாளை அரசியலமைப்புச் சட்டத்தை அழிப்பதற்கான நாளாகக் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில், இந்திய அரசியலமைப்பின் மதிப்புகள் ஓரங்கட்டப்பட்டன. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
எமர்ஜென்சி காலம்:
கடந்த 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அப்போதைய இந்திய பிரதமர் இந்தியா காந்தி இந்தியா முழுவதும் எமர்ஜென்சியை அறிவித்தார். இந்த எமர்ஜென்சி காலம் 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி முதல் 1977ம் ஆண்டு மார்ச் 21 வரை அமலில் இருந்தது. எமர்ஜென்சி காலத்தில் மக்கள் பட்ட துயரம் குறித்து சமூக ஊடகங்களில் எழுதிய பிரதமர் மோடி, “நமது அரசியலமைப்பின் உணர்வு எவ்வாறு மீறப்பட்டது என்பதை எந்த இந்தியரும் ஒருபோதும் மறக்க முடியாது. நாடாளுமன்றத்தின் குரல் அடக்கப்பட்டு நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 42வது திருத்தம் காங்கிரஸ் கட்சியின் செயல்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஏழைகள், ஓரங்கட்டப்பட்டவர்கள் மற்றும் தலித்துகள் குறிப்பாக குறிவைக்கப்பட்டனர். அதில் அவர்களின் கண்ணியத்தை அவமதித்தனர்.
அவசரநிலைக்கு எதிரான போராட்டத்தில் உறுதியாக நின்ற அனைவருக்கும் வணக்கம் செலுத்துகிறோம். இந்த மக்கள் இந்தியா முழுவதிலுமிருந்து, ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும், ஒரே நோக்கத்திற்காக ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்றிய வெவ்வேறு சித்தாந்தங்களிலிருந்து வந்தவர்கள். இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதும், நமது சுதந்திரப் போராளிகள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த இலட்சியங்களைப் பராமரிப்பதும் அவர்களின் குறிக்கோளாக இருந்தது. அவர்களின் கூட்டுப் போராட்டமே அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் புதிய தேர்தல்களை நடத்தவும் உறுதி செய்தது. அதில் அவர்கள் படுதோல்வியடைந்தனர். நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள கொள்கைகளை வலுப்படுத்தவும், வளர்ந்த இந்தியா என்ற நமது கனவை நனவாக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். முன்னேற்றத்தின் புதிய உயரங்களைத் தொடுவோம், ஏழைகள் மற்றும் வறியவர்களின் கனவுகளை நிறைவேற்றுவோம்.” என்றார்.
எனக்கு ஒரு கற்றல் அனுபவம் – பிரதமர் மோடி
When the Emergency was imposed, I was a young RSS Pracharak. The anti-Emergency movement was a learning experience for me. It reaffirmed the vitality of preserving our democratic framework. At the same time, I got to learn so much from people across the political spectrum. I am… https://t.co/nLY4Vb30Pu
— Narendra Modi (@narendramodi) June 25, 2025
தொடர்ந்து பிரதமர் மோடி, “ஆர்.எஸ்.எஸ்ஸின் இளம் பிரச்சாரகராக இருந்தேன். அவசரநிலை எதிர்ப்பு இயக்கம் எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. நமது ஜனநாயக கட்டமைப்பைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இது மீண்டும் உறுதிப்படுத்தியது. மேலும், அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதும் உள்ள அனைத்து மக்களிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. அந்த அனுபவங்களில் சிலவற்றை புளூகிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளை ஒரு புத்தக வடிவில் தொகுத்துள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதன் முன்னுரையை அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தின் மூத்த வீரரான எச்.டி. தேவகவுடா ஜி எழுதியுள்ளார். அவசரநிலை டைரீஸ் என்பது அவசரநிலை காலத்தில் எனது பயணத்தின் ஒரு விவரம். இது அந்தக் காலத்தின் பல நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது. அவசரநிலையின் அந்த இருண்ட நாட்களை நினைவில் வைத்திருப்பவர்கள் அல்லது அந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைவரும் தங்கள் அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இது 1975 முதல் 1977 வரையிலான அவமானகரமான காலம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.” என்றார்.