AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘வெப்ப அலை’ எச்சரிக்கை.. “வெளியில் செல்வதைத் தவிருங்கள்”.. நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி முக்கிய அறிவுறுத்தல்!!

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்தத் தீவிர வெயிலால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆவர். இந்த ஆரம்பக்கால எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால், அது மிக விரைவாக ஆபத்தான வெப்பப் பக்கவாதமாக (Heatstroke) மாறக்கூடும். எனவே, சரியான நேரத்தில் வழங்கப்படும் கவனிப்பு மட்டுமே ஆபத்துக்களைத் தவிர்க்கும்.

‘வெப்ப அலை’ எச்சரிக்கை.. “வெளியில் செல்வதைத் தவிருங்கள்”.. நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி முக்கிய அறிவுறுத்தல்!!
பிரதமர் நரேந்திர மோடி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 May 2026 13:42 PM IST

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பிராந்தியங்களில் தற்போது கோடை வெயில் உச்சத்தைத் தொட்டு, கடுமையான வெப்ப அலை (Heatwave) நிலவி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையமும் (IMD) மற்றும் பொதுச் சுகாதாரத் துறையும் நாட்டின் பல பகுதிகளில் இயல்பான அளவை விடக் கூடுதல் வெப்பநிலை பதிவாகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், இன்னும் அடுத்த நான்கு நாட்களுக்கு இந்தத் தீவிர வெப்ப அலை நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிக்க: என்ன நடக்குமோ? ‘எல் நினோ’ அச்சுறுத்தல்.. பருவமழை அமைப்பு தலைகீழாக மாறலாம்!

பிரதமர் மோடி வழங்கிய அறிவுரை:

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தைக் கையாள்வது குறித்தும், மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் தொடர்ச்சியான பதிவுகளைப் பகிர்ந்துள்ளார். “இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்பநிலையும், அதனால் எழும் சவால்களும் நிலவி வருகின்றன. இந்த வெயில் நம் அனைவரையும் பாதிக்கக்கூடியது என்பதால், பொதுமக்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எப்போதும் உங்களை நீரேற்றத்துடன் (Hydrated) வைத்துக் கொள்ளுங்கள்; வெளியில் செல்லும் போது மறக்காமல் குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து உதவுங்கள். இத்தகைய கடினமான காலநிலையில் நாம் காட்டும் இந்தச் சிறு கனிவு பலரது தாகத்தைத் தீர்க்கும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்பக் களைப்பு மற்றும் அறிகுறிகள்:

வெப்பத்தின் காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் மற்றும் அதற்கான உடனடித் தீர்வுகள் குறித்தும் பிரதமர் மோடி விரிவாக விளக்கியுள்ளார். தலைச்சுற்றல், குமட்டல் அல்லது கடுமையான சோர்வு போன்ற வெப்பக் களைப்பின் (Heat Exhaustion) அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். உங்களைச் சுற்றியுள்ள எவருக்கேனும் உடல்நிலை சரியில்லாமல் போவது போன்றோ, பலவீனமாக உணர்வது போன்றோ அல்லது தலைவலி ஏற்படுவது போன்றோ தெரிந்தால், அவர்களை உடனடியாக நிழலான, குளிர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல உதவ வேண்டும். அவர்களுக்குப் போதுமான குடிநீர் மற்றும் ஓஆர்எஸ் (ORS) போன்ற பானங்களை வழங்க வேண்டும்.

பாதிப்புக்குள்ளாகும் பிரிவினர்:

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்தத் தீவிர வெயிலால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆவர். இந்த ஆரம்பக்கால எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால், அது மிக விரைவாக ஆபத்தான வெப்பப் பக்கவாதமாக (Heatstroke) மாறக்கூடும். எனவே, சரியான நேரத்தில் வழங்கப்படும் கவனிப்பு மட்டுமே ஆபத்துக்களைத் தவிர்க்கும். மேலும், பொதுமக்கள் தங்களது குடும்பத்தில் உள்ள முதியவர்கள், பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஆகியோரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்க வேண்டும் என்றும், அவர்களைப் மதிய நேர உச்சி வெயிலில் வெளியில் செல்வதைத் தவிர்த்து, ஓய்வெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிக்க: ‘தீவிரமெடுக்கும் எபோலா வைரஸ் பரவல்’.. இந்த நாடுகளுக்கு அவசியமின்றி பயணிப்பதை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

விலங்குகள் மற்றும் பறவைகளுக்குப் புகலிடம்:

மனிதர்களைத் தாண்டி, நம்மைச் சுற்றியுள்ள பிற உயிரினங்கள் மீதும் மக்கள் கருணை காட்ட வேண்டும் என்று பிரதமர் உருக்கமாக வேண்டியுள்ளார். “இந்தக் கடுமையான வெயில் காலத்தில், நம்மைச் சுற்றியுள்ள பறவைகள் மற்றும் விலங்குகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். உங்களது வீடுகள், பால்கனிகள், மொட்டை மாடிகள், கடைகள் அல்லது அலுவலகங்களுக்கு வெளியே ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைப்பதன் மூலம் தாகத்தோடு இருக்கும் ஒரு பறவையின் உயிரைக் காப்பாற்ற முடியும். இந்தச் சவாலான நாட்களில் கனிவும் மாந்தநேயமும் நம்மை வழிநடத்தட்டும்” என்று கூறியுள்ளார்.

Follow Us