AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சதம் அடிக்கும் வெயில்.. வரும் நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்..

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதம் அடிக்கும் வெயில்.. வரும் நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 May 2026 06:25 AM IST

வானிலை நிலவரம், மே 26, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கக்கூடிய சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருத்தணியில் 41.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 41.1 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 39.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் 38.7 டிகிரி செல்சியஸ், தஞ்சையில் 38 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 39.1 டிகிரி செல்சியஸ், மதுரையில் 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

படிப்படியாக அதிகரிக்கும் வெப்பநிலை:

வரக்கூடிய நாட்களில் கடலோர தமிழகப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்புகள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உள் தமிழகப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இலவச கறி தர மறுப்பு – போதையில் 100க்கும் மேற்பட்ட வாத்துக்களை வெட்டி கொன்ற இளைஞர்கள்

அதே சமயத்தில், அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கும் ?

இது ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழையும் பதிவாகி வருகிறது. அந்த வகையில், வரக்கூடிய நாட்களிலும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நீதிமன்ற தீர்ப்பை மீறும் கர்நாடகா – மேகதாது அணை விவகாரத்தில் பிரதமருக்கு முதல்வர் கடிதம்

மே 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து, மே 31ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us