AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக இந்தித் திணிப்பு வாதம்? முதல்வருக்கு மத்திய அமைச்சர் கேள்வி

Education Policy : முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தேசிய கல்விக் கொள்கை குறித்து தனது கருத்தை பதிவிட்டிருந்த நிலையில், அதற்கு நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக இந்தித் திணிப்பு வாதம்? என கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவு குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக இந்தித் திணிப்பு வாதம்?  முதல்வருக்கு மத்திய அமைச்சர் கேள்வி
தர்மேந்திர பிரதான் - மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 04 Apr 2026 18:36 PM IST

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தேசிய கல்விக் கொள்கை குறித்து தனது கருத்தை பதிவிட்டிருந்தார், அதில், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒரு பகுதியாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட பாடத்திட்டக் கட்டமைப்பு என்பது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட மொழித் திணிப்பு முயற்சியாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், இந்திய மொழிகளை” ஊக்குவிப்பதாகக் கூறிக்கொண்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இந்தியாவின் வளமான மற்றும் பன்முக மொழிப் பாரம்பரியத்தை முறையாகப் புறக்கணிக்கிறது. அதே நேரம் ஹிந்திக்கு முன்னுரிமை அளிக்கும் செயல்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. மும்மொழி கொள்கை என்று அழைக்கப்படுவது, உண்மையில், இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஹிந்தியை விரிவுபடுத்துவதற்கான ஒரு மறைமுகமான வழிமுறையாகும்.

இதையும் படிக்க : தலைவருக்காக உங்கள் வீட்டு படியேறினேனே.. இறக்கமில்லாமல் மறுத்தவர் தானே நீங்கள்.. இபிஎஸ்-ஐ விளாசிய முதல்வர்!!

தென் மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு, இந்த புதிய பாடத்திட்ட கட்டமைப்பு, கட்டாயம் ஹிந்தி கற்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. ஆனால் ஹிந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லது பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகளைக் கற்க கட்டாயப்படுத்தப்படுவார்களா? இத்தகைய தெளிவின்மை, இந்தக் கொள்கையின் ஒருதலைப்பட்சமான மற்றும் பாகுபாடு நிறைந்த தன்மையை அம்பலப்படுத்துகிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.

இது வெறும் மொழிப் பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு கூட்டாட்சி மற்றும் சம வாய்ப்பு பற்றிய பிரச்சினை. ஹிந்தி பேசும் மாணவர்களுக்குக் கட்டமைப்பு ரீதியாக முன்னுரிமை அளிப்பதன் மூலம், இந்தக் கொள்கை உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏற்றத்தாழ்வுகளை மேலும் விரிவுபடுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. பழனிசாமி தலைமையிலான அதிமுகவும், தமிழகத்தில் உள்ள அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் இந்தத் திணிப்பை ஏற்றுக்கொள்கின்றனவா? அல்லது, ஒரு முறையாவது, நமது மாணவர்களின் உரிமைகள், அடையாளம் மற்றும் எதிர்காலத்திற்காக அவர்கள் குரல் கொடுப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக இந்தித் திணிப்பு வாதம்?

 

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நீங்கள் கூறும் திணிப்பு என்ற வாதம், அரசியல் தோல்விகளை மறைப்பதற்கான ஒரு முயற்சியாக தெரிகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020, உண்மையில், மொழி விடுதலைக்கான ஒரு பிரகடனமாகும். ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் தமது பெருமைமிக்க மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கிறது. இதனை “கட்டாய ஹிந்தி திணிப்பு என்று தவறாக சித்தரிப்பதன் மூலம், நீங்கள் தமிழைப் பாதுகாக்கவில்லை. மாறாக, நமது இளைஞர்கள் பன்மொழித் திறன் கொண்ட உலகளாவிய தலைவர்களாக உருவெடுக்கும் வாய்ப்பை மறுக்கும் தடைகளை உருவாக்குகிறீர்கள்.

பன்மொழித்தன்மையை ஒரு அச்சுறுத்தலாக சித்தரிப்பது தவறானதாகும். கூடுதல் மொழிகளைக் கற்பதால் தமிழ் பலவீனமடைவதில்லை. மாறாக, அம்மொழியில் உள்ள பேச்சாளர்கள் பன்மொழித் திறன் கொண்டவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும், மொழிரீதியாக சிறந்தவர்களாகவும் இருக்கும்போது அந்த செழுமையடைகிறது.

இதையும் படிக்க : நெருங்கும் தேர்தல்.. சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக மையக்குழு கூட்டம்..

பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையில், காசி தமிழ்ச் சங்கம் முதல் உலக அரங்கம் வரை தமிழ் ஒரு தேசியப் பொக்கிஷமாகப் போற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களை இந்திய மொழிகளைக் கற்கத் தீவிரமாக ஊக்குவிக்கும் வேளையில், உங்கள் அரசு பிரிவினைவாத வாக்கு வங்கிப் பிரச்சாரத்திற்காகத் தமிழ் மாணவர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. வளங்கள் பற்றிய பேச்சு வெறும் வெளிவேஷம் தான். தமிழ்நாட்டில் பிஎம் பள்ளிகளை நிறுவுவதாக உறுதியளித்த பின்னரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து, அதனைத் தடுத்து நிறுத்தியது திமுக அரசுதான்.

நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக இந்தித் திணிப்பு வாதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, ஒவ்வொரு இந்திய மொழியையும் வலுவூட்டும் தேசியப் பணியில் இணையுங்கள் என்று அவர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us