சுங்கக் கட்டண முறையில் பெரிய மாற்றம்.. இனி கிலோ மீட்டர் கணக்கு தான்.. வெளியான தகவல்
Kilometer Bases New toll Policy : நாடு முழுவதும் புதிய சுங்கக் கட்டணம் நடைமுறையை விரைவில் மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதன் மூலம், இனி கிலோ மீட்டர் கணக்கில் மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. தற்போது, 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலையான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

டெல்லி, ஜூன் 11 : புதிய சுங்கக் கட்டணம் நடைமுறையை (new toll policy) மத்திய அரசு (union goverment) விரைவில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கிலோ மீட்டர் கணக்கில் புதிய கட்டண முறையை அமலுக்கு விரைவில் வர உள்ளதாக தெரிகிறது. நாடு முழுவதும் உள்ள சுங்கக்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கக் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க பாஸ்டேக் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பாஸ்டேக் (fastag rules) மூலம் வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் ஸ்டீக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பாஸ்டேக்கை பயனர்களுக்கு ஏற்ப அவ்வப்போது புதிய விதிமுறைகளை கொண்டு வருகிறது.
சுங்கக் கட்டண முறையில் பெரிய மாற்றம்
இப்படியான சூழலில், என்டிடிவியின் தகவலின்படி, புதிய சுங்கக் கட்டணம் நடைமுறையை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதற்கான புதிய முறையை அறிமுகப்படுத்த உள்ளது.
இது மக்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, முழு தூரத்திற்கான கட்டணம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய நடைமுறை அதனை எளிதாக்குகிறது.




அதாவது, பயணம் செய்யும் கிலோ மீட்டருக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் செலுத்தும் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதற்கான ஆலோசனையும் நடந்து வருவதாக தெரிகிறது. மேலும் இது சுங்கச்சாவடிகளில் நெரிசல்கள் மற்றும் நேரத்தை வீணடிப்பதைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஆலோசனை
தற்போது, தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008-ன்டி, 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலையான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே, புதிய கட்டண கொள்கை மூலம் இனி எவ்வளவு தூரம் பயணிக்கிறார்களோ அவ்வளவு தூரத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இது மக்களுக்கு பெரிதும் உதவும் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில், சுங்கக் கட்டணமே இல்லாமல், பாஸ்டேக் மூலம் கட்டணமும் வசூலிக்கப்படும் அம்சத்தையும் மத்திய அரசு கொண்டு வர உள்ளது. அதாவது, அதி நவீன தானியங்கி கருவி மூலம் தானாகவே 100 கிலோ மீட்டருக்கு ஒருமுறை கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய விரைவில் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. உதாரணமாக 100 கிலோ மீட்டருக்கு ரூ.50 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.