AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எரிபொருள் விலை உயர்வு.. உள்நாட்டு விமானச் சேவைகளை அதிரடியாகக் குறைக்க திட்டம்.. ஷாக் தகவல்!!

விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் பள்ளி விடுமுறைக் காலத்திற்குப் பிந்தைய தற்காலிகத் தேவை சரிவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாட்டா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், தனது உள்நாட்டுச் சேவைகளை 15 சதவீதம் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வு.. உள்நாட்டு விமானச் சேவைகளை அதிரடியாகக் குறைக்க திட்டம்.. ஷாக் தகவல்!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 May 2026 14:11 PM IST

இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள முன்னணி விமான நிறுவனங்களான ஏர் இந்தியா  மற்றும் இண்டிகோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களது உள்நாட்டு விமானச் சேவைகளை அடுத்த மூன்று மாதங்களுக்கு (90 நாட்களுக்கு) அதிரடியாகக் குறைக்க முடிவு செய்துள்ளன. வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை இந்தச் சேவை குறைப்பு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவி வரும் போர்க்காலச் சூழலால் விமான எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்ததே இதற்குக் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ‘வெப்ப அலை’ எச்சரிக்கை.. “வெளியில் செல்வதைத் தவிருங்கள்”.. நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி முக்கிய அறிவுறுத்தல்!!

உள்நாட்டுச் சேவையை குறைக்க திட்டம்:

விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் பள்ளி விடுமுறைக் காலத்திற்குப் பிந்தைய தற்காலிகத் தேவை சரிவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாட்டா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், தனது உள்நாட்டுச் சேவைகளை 15 சதவீதம் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, தனது தினசரிச் சேவைகளில் 5 முதல் 7 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது. இண்டிகோ நிறுவனம் நாளொன்றுக்கு சராசரியாக 1,950 விமானங்களை இயக்குவதால், இந்தச் சிறிய சதவீதக் குறைப்பு கூடக் கணிசமான எண்ணிக்கையிலான விமானங்கள் ரத்தாவதைக் குறிக்கும்.

சேவைக் குறைப்பிற்கான முக்கியக் காரணங்கள்:

அமெரிக்கா – ஈரான் போர் வெடித்ததைத் தொடர்ந்து உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஏர் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, உள்நாட்டு விமானங்களுக்கான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ₹80,000ல் இருந்து தற்போது ₹1 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கோடை மற்றும் பள்ளி விடுமுறை நாட்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, வழக்கமாகவே ஜூன் மற்றும் அதற்குப் பிந்தைய மாதங்களில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் முன்பதிவுகள் குறையும்.

சர்வதேசச் சேவைகள் குறைப்பு: வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் ஏர் இந்தியா ஏற்கனவே தனது சர்வதேசச் சேவைகளைக் குறைத்துள்ளது. இதன் காரணமாக டெல்லி, மும்பை போன்ற முக்கிய விமான நிலையங்களுக்கு உள்நாட்டுப் பயணிகள் வந்து இணையும் (Connecting Flights) எண்ணிக்கையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்:

பயணிகள் கடைசி நேரத்தில் தவிப்பதைத் தவிர்க்கவும், குழப்பங்களைத் தடுக்கவும் ரத்து செய்யப்பட உள்ள விமானங்கள் அனைத்தும் ஏற்கனவே முன்பதிவு இணையதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தத் திடீர் திறன் குறைப்புகாரணமாக, குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் அதிகத் தேவையுள்ள முக்கிய வழித்தடங்களில் உள்நாட்டு விமானக் கட்டணங்கள் கணிசமாக உயரக்கூடும் எனத் துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிக்க: ‘தீவிரமெடுக்கும் எபோலா வைரஸ் பரவல்’.. இந்த நாடுகளுக்கு அவசியமின்றி பயணிப்பதை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

சந்தையில் கடும் இயக்கச் செலவு அழுத்தங்கள் நீடிப்பதால், தற்போதைக்குச் சேவைகளை விரிவாக்குவதை விடத் தங்களது இலாப வரம்பைப் பாதுகாப்பதிலேயே விமான நிறுவனங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

Follow Us