AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிஸ்கட் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மோசமான விளைவுகள் – எச்சரிக்கும் மருத்துவர்கள்

Shocking Biscuit Truth : பிஸ்கட் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு. ஆனால் தொடர்ந்து பிஸ்கட் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அதிகரிப்பு, உடல் எடை அதிகரிப்பு என உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பிஸ்கட் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மோசமான விளைவுகள் – எச்சரிக்கும் மருத்துவர்கள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Jul 2025 23:20 PM IST

இப்போதெல்லாம், பிஸ்கட் (Biscuit) என்பது  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த உணவுப் பொருளாக இருக்கிறது. பிஸ்கட்டின் இனிப்பு மற்றும் மொறுமொறுப்பான தன்மை அனைவருக்கும் பிடிக்கும். பலர் காலையிலும் மாலையிலும் தேநீருடன் (Tea) பிஸ்கட்களை சிற்றுண்டியாக சாப்பிடுகிறார்கள். ஆனால் நாம் சுவைக்காக சாப்பிடும் பிஸ்கட்டுகள் படிப்படியாக நமது ஆரோக்கியத்திற்கு  விஷமாக மாறும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆமாம்.. பிஸ்கட்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவை உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தைக் குறைக்கின்றன, செரிமான சக்தியைக் குறைக்கின்றன. இது எடை அதிகரிப்பு மற்றும்  இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்குகிறது.

பிஸ்கட் என்னென்ன பொருட்களால் தயாரிக்கப்படுகிறது?

மருத்துவ நிபுணர்களின் தகவலின்படி, பிஸ்கட் தயாரிக்க சுத்திகரிக்கப்பட்ட மாவு, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பொருட்கள் அனைத்தும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட மாவில்  நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அவை வயிற்றில் எளிதில் ஜீரணமாகாது. இது உங்கள் செரிமான அமைப்பை சேதப்படுத்தும். மலச்சிக்கல், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்படலாம்.

இதையும் படிக்க : ஒரு மாதம் அரிசி சாப்பிடாவிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்?

இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்

நீரிழிவு நோயாளிகள் பிஸ்கட்களை நிரந்தரமாகத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பிஸ்கட்டுகளில் அதிக கிளைசெமிக் குறியீடு உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்கிறது. இது மனித ஆரோக்கியத்திற்கு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் எதிர்மறை விளைவுகள்

பிஸ்கட்டுகளில் மிகக் குறைந்த புரதம், நார்ச்சத்து மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் குறைவாக உள்ளன. எனவே, அவற்றை குழந்தைகளுக்கு உணவாக அளிப்பது அவர்களின் உடல் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலவீனப்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் அவர்கள் விரைவிலேயே நோய்வாய்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிக்க : முட்டை சாப்பிடுவது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுமா? – உண்மை என்ன?

உடல் பருமன் ஆபத்து

உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பிஸ்கட்டில் உள்ள கலோரிகளும் சர்க்கரையும் உடலில் கொழுப்பாகக் குவியத் தொடங்குகின்றன. இது எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், ஏற்கனவே உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக பிஸ்கட் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். மற்றவர்களும் தங்கள் சாப்பிடும் அளவைக் குறைக்க வேண்டும். மீறி தொடர்ந்தால் அவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Follow Us