வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாக வெளியான வதந்தி… தயாரிப்பாளர் விளக்கம்
Vaadivaasal Movie: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே தொடர்ந்து படம் தொடர்பான வதந்திகள் பரவி வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் படம் கைவிடப்பட்டதாக வெளியான வதந்திக்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சூர்யா (Actor Suriya) மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் (Director Vetrimaaran) கூட்டணியில் அறிவிக்கப்பட்ட படம் வாடிவாசல். இந்தப் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை பாகம் இரண்டில் பிசியாக இருந்தார். அதே நேரத்தில் நடிகர் சூர்யாவும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்தார். இது குறித்த அப்டேட் அடுத்து எதுவும் வெளியாகாமல் இருந்ததால் படம் உருவாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தாணு அகிலம் ஆராதிக்க “வாடிவாசல்” திறக்கிறது என்று ஜனவரி மாதம் 15-ம் தேதி 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அறிவிப்பை வெளியிட்டனர்.
வாடிவாசல் குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட அப்டேட்:
ஜனவரி மாதம் இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசைப் பணி தொடங்கியதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மார்ச் மாதம் 7-ம் தேதி 2025-ம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்து இருந்தார். இதனல் படத்தின் பணிகள் தொடங்கியது என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.




ஆனால் இதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது குறித்து எந்த வித அதிகாரப்பூர அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. இந்த நிலையில் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் சினிமா வட்டாரங்களில் பரவிய நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Vaadivaasal song composing has started . ✨ @theVcreations @Suriya_offl pic.twitter.com/squZGM0dyz
— G.V.Prakash Kumar (@gvprakash) March 7, 2025
மேலும் தொடர்ந்து சூர்யா ரெட்ரோ படத்தின் வெளியீட்டுக்கு பிறகு வாடி வாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் கூட்டணி வைத்து அந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் தாணு கொடுத்த அப்டேட்:
வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார். அதன்படி அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, வாடிவாசல் படத்திற்கான அனிமேஷன் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றது. அந்தப் பணிகள் முடிந்ததும் படத்தின் படப்பிடிப்பு கண்டிப்பாக துவங்கும் என்று உறுதியளித்துள்ளார். இந்த செய்தி வெளியான பிறகே ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.