Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சுரேஷ் கோபி படத்தின் வெளியீட்டில் சிக்கல்… கோவத்தில் மலையாள திரையுலகம்!

Janaki vs State of Keral: மலையாள சினிமாவில் முன்னணி நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு வெளியீட்டில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மலையள திரையுலகில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் என்ன நடந்தது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

சுரேஷ் கோபி படத்தின் வெளியீட்டில் சிக்கல்… கோவத்தில் மலையாள திரையுலகம்!
ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Jun 2025 16:23 PM

கேரள சினிமாவில் முன்னணி நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி (Actor Suresh Gopi) நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஜானகி வெர்ஷஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பிரவின் நாராயணன் இயக்கி உள்ளார். சுரேஷ் கோபி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகை அனுபமா பரமேசுவரன் (Actress Anupama Parameswaran) நாயகியாக நடித்து உள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர்கள் சுரேஷ் கோபி மற்றும் அனுபமாவின் பேச்சு இணையத்தில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தணிக்கைகாக சென்ற இந்த ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

ஜானகி Vs ஸ்டேட் ஆஃப் கேரளா படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்:

சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகியுள்ள ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா படம் தணிக்கைக்காக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் ஜானகி வெர்ஷஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தைப் பார்த்த தணிக்கை குழு அந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்திற்கு ஜானகி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அது சீதா தேவியின் மற்றொரு பெயர் ஜானகி. இந்தப் பெயரை மாற்றக் கோரி தணிக்கை குழு படக்குழுவினரிடம் வாய்மொழி வார்த்தையாக கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் சென்சார் குறித்த அறிவிப்பையும் தணிக்கை குழு நிறுத்தி வைத்துள்ளது. கோர்ட் ரூம் ட்ராமாகாவ உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் இந்த செயலை எதிர்த்து மலையாள திரையுலகினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் கேரள உயர் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை 27-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு நடைப்பெற்ற விசாரணையின் போது தனிக்கை குழுவிற்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதில் இந்திய சினிமாவில் முன்னதாக வெளியான பலப் படங்களில் ராமர் மற்றும் சீதாவின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி இந்தப் படத்திற்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிபந்தனையை வைத்தது குறித்தும் தனிக்கை சான்றிதழை நிறுத்தி வைத்துள்ளது தொடர்பாகவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஜானகி Vs ஸ்டேட் ஆஃப் கேரளா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: