Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரு அண்ணன் இருப்பது எப்போது ஸ்பெஷல் தான்… இணையத்தில் வைரலாகும் கார்த்தியின் பேச்சு

Actor Karthi: பழம் பெரும் நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் தான் நடிகர் சூர்யா. மற்றும் இளைய மகன் கார்த்தி. இவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இந்த நிலையில் தனது அண்ணன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஒரு அண்ணன் இருப்பது எப்போது ஸ்பெஷல் தான்… இணையத்தில் வைரலாகும் கார்த்தியின் பேச்சு
கார்த்திImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Jun 2025 14:55 PM

நடிகர் விஷ்ணு விஷாலின் (Vishnu Vishal) தம்பி ருத்ரா நாயகனாக அறிமுகம் ஆகும் படம் ஓஹோ எந்தன் பேபி. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் விழா சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. அந்த விழாவில் பங்கேற்ற நடிகர் கார்த்தி (Actor Karthi) தனது அண்ணன் குறித்து பேசியது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. அதில் நடிகர் கார்த்தி பேசியதாவது, எல்லாருக்கும் ஒரு அண்ணன் இருப்பது ஸ்பெஷலான விசயம். இப்போ எல்லாருமே சிங்கிள் சைல்ட்னு போயிட்டு இருக்காங்க ஆனால் அண்ணன் இருப்பது ஒரு ஸ்பெஷலான விசயம் தான். எல்லாரும் சொல்லுவாங்க அப்பா வந்து கையில தூக்கி வச்சு இருந்தா அண்ணன் தோல்ல தூக்கி வச்சுபாங்கனு.

அந்த வகையில நான் மிக மிக அதிர்ஷ்டசாலி. நாம அவங்கள நிறைய இடத்துல பாத்து பாத்து கத்துப்போம். அவங்க நிறைய இடத்துல நமக்கா நாம யோசிக்காத விசயத்தை கூட அவங்க நமக்கு பன்னி வச்சு இருப்பாங்க. அந்த வகையில் நான் ரொம்பவும் அதிர்ஷ்டசாலிதான். அப்பறம் இந்த படத்தின் விழாவிற்கு வந்ததும் அதுதான் காரணம்.

நான் முதல் படம் நடித்தபோது எனக்கு அத்தனை பேர்கிட்ட இருந்து அவ்வளவு அன்பு கிடைத்தது. எல்லாரும் வீட்டுக்கு வந்து வாழ்த்திட்டு போனாங்க. அத நான் திரும்ப என்ன மாதிரி அறிமுகம் ஆகுறவங்களுக்கு பன்னனும்னு நினைக்கிறேன். அதனாலதான் இந்தப் படத்தின் நாயகன் ருத்ராவை வாழ்த்துவதற்காக வந்தேன் என்றும் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இணையத்தில் கவனம் பெறும் நடிகர் கார்த்தியின் பேச்சு:

நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படங்கள்:

நடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மெய்யழகன். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் சர்தார் 2 மற்றும் வா வாத்தியார் ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.