Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Maaman Movie OTT Update: நடிகர் சூரி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் மாமன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே படத்தின் ஓடிடி உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமை குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மாமன்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Jun 2025 17:45 PM

நடிகர் சூரி (Actor Soori) நடிப்பில் கடந்த மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மாமன். இந்தப் படத்தின் திரைக்கதையை நடிகர் சூரியே எழுதி இருந்த நிலையில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி (Actress Aishwarya Lakshmi) நடிகர் சூரியின் ஜோடியாக இந்தப் படத்தில் நடித்து இருந்தார். நிஜத்திலும் மருத்துவம் படத்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி படத்திலும் மருத்துவராக நடித்து இருந்தார். இதுகுறித்து பேட்டியில் பேசிய நடிகர் சூரி ஐஸ்வர்யா லட்சுமி மருத்துவர் என்பதால் இந்தப் படத்தில் அவரது நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது என்று தெரிவித்து இருந்தார். முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர் சூரியின் மாமன் படத்தின் கதை என்ன?

நடிகர் சூரி நடிப்பில் வெளியான இந்த மாமன் படத்தில் நடிகர்கள் சுவாசிகா, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், பால சரவணன், ஜெயபிரகாஷ், பிரகீத் சிவன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். தாய்மாமன் மற்றும் மருகன் இடையே உள்ள பாசத்தை மையமாக வைத்து வெளியானது இந்தப் படம்.

நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருக்கும் தனது அக்கா மகன் மீது உயிரையே வைத்துள்ளார் சூரி. லட்டு என்று அழைக்கப்படும் அந்த குழந்தைக்கு சூரி அனைத்தும் அவரே செய்கிறார். இந்த நிலையில் தனது காதலி ஐஸ்வர்யா லட்சுமியை திருமணம் செய்துக்கொள்கிறார் நடிகர் சூரி.

அதனைத் தொடர்ந்து அவர்களது வாழ்க்கையில் என்ன நடக்கிறது. முன்பு மாதிரியே தனது மருமகன் உடன் நடிகர் சூரியால் இருக்க முடிகிறதா என்பதே படத்தின் கதை. ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்ப் எற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 5 வாரங்களை கடந்த நிலையில் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ஓடிடி நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஜீ 5 ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: