Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

3 BHK படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் குறித்து நெகிழ்ந்து பேசிய சித்தார்த் – வைரலாகும் வீடியோ

Actor Siddharth: நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 3 BHK. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகர் சித்தார்த் கண்கலங்கி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

3 BHK படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் குறித்து நெகிழ்ந்து பேசிய சித்தார்த் – வைரலாகும் வீடியோ
சித்தார்த்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 26 Jun 2025 18:55 PM

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் சித்தார்த் (Actor Siddharth). இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆன நடிகர் சித்தார்த் தனது 40-வது படமான 3 BHK படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் 3 BHK படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இதில் 3 BHK படத்தின் படக்குழுவினர் மற்றும் நடிகர்கள், இயக்குநர்கள் என திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு 3 BHK படம் குறித்தும் படத்தில் நடித்த நடிகர்கள் குறித்தும் வாழ்த்தி பேசினர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் கண்கலங்கி நடிகர் சித்தார்த் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதில் நடிகர் சித்தார்த் பேசியதாவது, இந்த 3 BHK படம் என்னுடைய தாய் தந்தை. அதற்கு என்ன அர்த்தம்னு நான் சொல்றேன். நான் சினிமாவில் நடிகராக வந்து நடிக்கும் 40-வது படம் இது ஒரு நடிகனா. எங்க தாய் தந்தையிடம் இதப் பத்தி நான் சொல்றப்போ 40 படம் நடிச்சுட்டியாடா சித்து என்று கேட்டார்.

அந்த கேள்விக்கு நான் அப்போ பதில் சொல்லல. ஆனா அந்த கேள்வியில் ஒரு பெருமை இருந்தது, ஆச்சரியம் இருந்தது. எங்க அப்பா கண்ல ஒரு ரிலீஃப் இருந்தது. எனக்கு முன்னாடி பேசுன எல்லாரும் என்ன அழ வச்சுட்டீங்க. இது ரொம்ப எமோஷ்னலான தருணமா எனக்கு இருக்கு. இந்த 40 படங்களையும் அமைச்சு கொடுத்தது என் தாய் தந்தைதான்.

இணையத்தில் கவனம் பெரும் நடிகர் சித்தார்த்தின் பேச்சு:

தாய் வந்து படத்தில் எழுத்தாளர் மற்றும் தந்தை வந்து படத்தின் தயாரிப்பாளர். என்ன நம்பி அவங்க பணத்தைப் போட்டு படம் பன்னதும், நான் 40 படங்களில் நடித்துள்ளது மிகவும் திருப்திகரமான விசயமா இருக்கு. மேலும் அந்த 40-வது படத்தை ஒரு தாய் தந்தை எனக்காக அமைச்சு கொடுக்குறாங்க.

தாய் வந்து எழுத்தாளர் ஸ்ரீ கணேஷ். தந்தை வந்து தயாரிப்பாளர் அருண் விஷ்வா. நன்றி ஸ்ரீ எனக்காக இந்த பிரபு என்கின்ர கதாப்பாத்திரத்தை கொடுத்ததற்கு. இவ்வளவு எமோஷ்னல் ஆக்குகிற அளவிற்கு அதுவும் படத்தில் ரிலீஸிற்கு முன்பு இவ்வளவு எமோஷ்னல் ஆக்குற அளவிற்கு ஒரு கதையும், படத்தையும் என்ன நம்பி இவ்வளவு பெரிய முதலீடு போட்டதற்கும் ரொம்ப ரொம்ப நன்றி என்று தெரிவித்துள்ளார்.