Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தேவாவின் கோபம் 50 நாட்களில் தொடங்குகிறது… கூலி படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

Coolie Movie: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது மிகவும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கும் படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் இன்று புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

தேவாவின் கோபம் 50 நாட்களில் தொடங்குகிறது… கூலி படக்குழு வெளியிட்ட போஸ்டர்!
கூலிImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Jun 2025 19:25 PM

கோலிவுட் சினிமாவில் 50 வருடங்களுக்கு மேலாக தன்னை சூப்பர் ஸ்டாராக நிலைநிறுத்தி வைத்துள்ளவர் நடிகர் ரஜினிகாந்த் (Super Star Actor Rajinikanth). இவரது நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கி உள்ளார். படம் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில் இன்று கூலி படத்தின் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை அவர்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் தேவாவின் கோபம் 50 நாட்களில் தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. படம் வெளியாக இன்னும் 50 நாட்கள் உள்ளதை படக்குழு இதன் மூலம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக 100 நாட்கள் இருந்த நிலையில் கூலி படக்குழு இதே மாதிரியான ஒரு போஸ்டரை தங்களது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று கூலி படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் உருவான சிக்கிடு பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

கூலி படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

ரஜினிகாந்தின் நடிப்பில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கூலி படம்:

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி வைத்தார் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. காரணம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தொடர்ந்து படங்கள் ஹிட் அடித்து வந்ததுதான். மேலும் கேங்ஸ்டர் கதையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து பல ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டு ரஜினிகாந்தை கேங்ஸ்டராக பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதமாக படத்தில் நடிகர்களின் தேர்வை பாரபட்சம் இல்லாமல் செய்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். பான் இந்திய மொழிகளில் படங்கள் வெளியாகி பார்த்து இருப்போம். ஆனால் பான் இந்திய நடிகர்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்திற்காக ஒன்றுதிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.