Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அட்லி படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுனை இயக்கப்போவது இவரா? வைரலாகும் தகவல்!

Actor Allu Arjun: நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லி உடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்தின் அப்டேட் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இந்தப் படத்திற்கு அடுத்ததாக அல்லு அர்ஜுன் படத்தை இயக்க உள்ளவர் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அட்லி படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுனை இயக்கப்போவது இவரா? வைரலாகும் தகவல்!
அல்லு அர்ஜுன்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Jun 2025 17:06 PM

நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun) தற்போது இயக்குநர் அட்லியுடன் (Atlee) கூட்டணி வைத்து விறுவிறுப்பாக நடித்து வரும் நிலையில் இந்தப் படத்திற்கு பிறகு அவர் யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் அல்லு அர்ஜுன் மலையாள சினிமாவில் பிரபலமாக இருக்கும் பேசில் ஜோசஃபின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பேசில் ஜோசஃபை நடிகர் என்று தென்னிந்திய சினிமாவில் உள்ள ரசிகர்கள் பலருக்கு தெரியும். ஆனால் அவர் ஒரு இயக்குநர் என்பது பெரும்பாலானோர்களுக்கு தெரியாது. குறிப்பாக மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த மின்னல் முரளி படத்தை இயக்கியது பேசில் ஜோசஃப் என்பது தெரிந்து பலரும் ஆச்சரியப்பட்டனர்.

இந்திய சினிமா வரலாற்றில் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியான மின்னல் முரளி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தியா மட்டும் இன்றி வெளி நாடுகளிலும் பேசில் ஜோசஃப் இந்தப் படத்திற்காக விருதுகளை வாங்கி குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேசில் ஜோசஃப் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன்:

இந்த நிலையில் சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் ஒரு தகவல்கள் பரவி வருகின்றது. அது என்ன என்றால் தற்போது இயக்குநர் அட்லி குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கமிட்டாகி பிசியாக இருக்கும் நிலையில் இந்தப் படம் முடிந்த பிறகு பேசில் ஜோசஃபின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்தப் படத்தின் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் ப்ரீ புரடெக்‌ஷன்கள் பணிகள் தொடங்கி நடைப்பெற்று வருவதாகவும் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நடிகர் அல்லு அர்ஜுனின் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Sun Pictures (@sunpictures)

அல்லு அர்ஜுன் – அட்லு கூட்டணியில் உருவாகும் படம்:

அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வை அறிவிப்பை நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளானா ஏப்ரல் மாதம் 8-ம் தேதி 2025-ம் ஆண்டு படக்குழு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் நாயகிகள் யார் யார் என்பதும் மேலும் 3-க்கும் மேற்பட்ட நாயகிகள் படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. இதில் நடிகை தீபிகா படுகோனே இணைந்துள்ளதை மட்டும் படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் மற்ற நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவிலை என்பது குறிப்பிடத்தக்கது.

WTC பைனலை நடத்த விரும்பும் BCCI.. விட்டுக்கொடுக்குமா இங்கிலாந்து?
WTC பைனலை நடத்த விரும்பும் BCCI.. விட்டுக்கொடுக்குமா இங்கிலாந்து?...
உச்சக்கட்ட பதற்றம்.. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
உச்சக்கட்ட பதற்றம்.. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்...
சென்னையில் இந்தியாவின் முதல் 10 வழிச் சாலை – எப்போது திறப்பு?
சென்னையில் இந்தியாவின் முதல் 10 வழிச் சாலை – எப்போது திறப்பு?...
ஒரு கொலையில் சிக்கும் 7 பெண்கள்.. ஓடிடியில் இந்த படம் பாருங்க!
ஒரு கொலையில் சிக்கும் 7 பெண்கள்.. ஓடிடியில் இந்த படம் பாருங்க!...
தமிழகத்தில் மீன்களின் விலை குறைய நாளை முதல் வாய்ப்பு...
தமிழகத்தில் மீன்களின் விலை குறைய நாளை முதல் வாய்ப்பு......
இன்ஸ்டாகிராம் 2 Followers குறைந்ததால் கணவன் மீது மனைவி புகார்!
இன்ஸ்டாகிராம் 2 Followers குறைந்ததால் கணவன் மீது மனைவி புகார்!...
நான் ஸ்கூல் படிக்கும்போதே அஜித் ரசிகை - நடிகை சினேகா!
நான் ஸ்கூல் படிக்கும்போதே அஜித் ரசிகை - நடிகை சினேகா!...
Air India விபத்து - DNA மூலம் அடையாளம் காணப்படும் உடல்கள்!
Air India விபத்து - DNA மூலம் அடையாளம் காணப்படும் உடல்கள்!...
அகமதாபாத் விமான விபத்து.. பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு
அகமதாபாத் விமான விபத்து.. பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு...
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி.. வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்கா?
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி.. வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்கா?...
’நீ அழகா இல்ல' கணவரை ஏரித்துக் கொன்ற மனைவி.. பகீர் வாக்குமூலம்
’நீ அழகா இல்ல' கணவரை ஏரித்துக் கொன்ற மனைவி.. பகீர் வாக்குமூலம்...