திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை! – முதல்வர் ஸ்டாலின்

Tamil Nadu CM MK Stalin: இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “உழைப்பை அள்ளிக் கொடுங்கள்; உதயசூரியன் உதிக்கட்டும்” என குறிப்பிட்டு, “#வாக்களியுங்கள்_திமுகவிற்கு” என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை! - முதல்வர் ஸ்டாலின்

கோப்பு புகைப்படம்

Published: 

16 Mar 2026 15:49 PM

 IST

சென்னை, மார்ச் 16, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நேற்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. வரவிருக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் திமுகவைப் பொருத்தவரையில், எப்படியாவது மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “உழைப்பை அள்ளிக் கொடுங்கள்; உதயசூரியன் உதிக்கட்டும்” என குறிப்பிட்டு, “#வாக்களியுங்கள்_திமுகவிற்கு” என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

நெருங்கும் தேர்தல்:

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டிலும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் திமுக செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: விளாத்திகுளம் விஷயத்தில் ஏன் இவ்வளவு மெத்தனம்? முதல்வர் ஸ்டாலினை குற்றம்சாட்டிய நடிகை கவுதமி..

திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட மொத்தம் 21 கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 16, 2026 அன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேர்தல் பணிகள், பிரச்சாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயராது உழைப்போம் – முதல்வர் ஸ்டாலின் பதிவு:

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! வீடுதோறும் சென்றடைந்துள்ள #DravidianModel-இன் சாதனைகள்!  இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள்! அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்!

இதுதான் தி.மு.க. ஏப்ரல் 23 அன்று தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும், நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம். #DravidianModel 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண், உறக்கம் இல்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us
Related Stories
அதிமுகவில் இணைந்தால் விஜய் ‘கெய்னர்’; இல்லையென்றால் ‘லூசர்’ – ஜெயக்குமார்
Maduravoyal Constituency Election 2026: மதுரவாயல் சட்டமன்ற தொகுதி.. பல ஆண்டுகளாக மக்கள் வைக்கும் கோரிக்கை.. அதிமுக – திமுக – தவெக..
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாளில் என்ன நடக்கிறது?
R. Gandhi Tamil Nadu Election: திமுகவின் சாதனை செம்மல்.. ராணிப்பேட்டையின் வெற்றி முகம்.. ஆர். காந்திக்கு மீண்டும் வசமாகுமா தொகுதி!
தமிழகத்தில் 2,106 பறக்கும் படைகள்.. “பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது”.. அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தல்..
K. Pitchandi Tamil Nadu Election: கருணாநிதியால் அடையாளம் காண்பிக்கப்பட்டவர்… 6 முறை வெற்றி வாகை சூடியவர்.. மீண்டும் தடம் பதிப்பாரா கு.பிச்சாண்டி!
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
பிறந்த குழந்தையை கையில் வாங்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தந்தை - வைரலாகும் வீடியோ
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்