Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Post Office : ஆகஸ்ட் 2 ஆம் தேதி தபால் நிலைய சேவைகள் ரத்து.. வெளியான முக்கிய அறிவிப்பு!

Post Offices Services Will be Suspended | தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் தபால் நிலைய தேவைகள் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், ஆகஸ்ட் 2, 2025 அன்று தபால் நிலைய சேவைகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Post Office : ஆகஸ்ட் 2 ஆம் தேதி தபால் நிலைய சேவைகள் ரத்து.. வெளியான முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 31 Jul 2025 13:06 PM

பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் தபால் நிலைய சேவைகளை (Post Office Services) அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஆகஸ் 02, 2025 அன்று தென் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் நிலையங்களில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் தபால் நிலையங்கள் புதிய வடிவத்தை பெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தபால் நிலைய சேவைகள் ரத்து செய்யப்படுவது குறித்து வெளியான அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ள தபால் நிலையங்கள்

பொதுமக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக தபால் நிலையங்கள் உள்ளன. பொதுமக்கள் இடையே தற்போது அஞ்சல் அனுப்பும் பழக்கம் இல்லை என்றாலும்,  நிறுவனங்கள் மற்றும் அரசு அனுப்பும் கடிதங்கள், ஆவணங்கள், அறிவிப்புகள் அனைத்தும் தபால் நிலையங்கள் வழியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இதுதவிர ஆன்லைன் ஷாப்பிங் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் தபால் நிலையங்கள் மூலமே வாடிக்கையாளர்களை சென்றடைகின்றன. மேலும், தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது, பணத்தை எடுப்பது உள்ளிட்ட காரணங்களுக்காகவும் ஏராளமான பொதுமக்கள் தபால் நிலையங்களுக்கு செல்கின்றனர்.

இதையும் படிங்க : மகளிர் உரிமைத் தொகை முதல் ரேஷன் கார்டு வரை.. அனைத்து சேவைகளும் கிடைக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

ஆகஸ்ட் 2-ல் தபால் நிலைய சேவைகள் ரத்து

பொதுமக்கள் வாழ்வில் தபால் நிலையங்கள் இவ்வளவு முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், ஆகஸ்ட் 2, 2025 அன்று தபால் நிலைய அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் துறையின் மேம்படுத்தப்பட்ட 2.0 அம்சம் ஆகஸ்ட் 4, 2025 முதல் சென்னை நகர தெற்கு கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் புதிதாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட புதிய அம்சத்தை தடையின்றி செயல்படுத்த ஆகஸ்ட் 2, 2025 பரிவர்த்தனைகள் நடைபெறா நாளாக திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 45 நாட்களில் நடவடிக்கை.. மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய தகவல் சொன்ன அமைச்சர்!

எனவே ஆகஸ்ட் 2, 2025 அன்று தென் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் நிலையங்களில் எந்தவித தபால் சேவையும் மேற்கொள்ளப்படாது. எனவே பொதுமக்கள்  இதனை கருத்தில் கொண்டு தங்களுக்கு ஏதெனும் தபால் நிலைய சேவைகளின் தேவை இருந்தால் அவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.