தொடர்ந்து விலை உயரும் பெட்ரோல், டீசல்.. பொதுமக்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!
Petrol and Diesel Price Increasing Often | 5வது முறையாக இந்தியாவில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பல்வேறு சிக்கல்கள் உருவாகக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாதிரி புகைப்படம்
மேற்கு ஆசியா போர் காரணமாக உலக நாடுகள் எதிர்க்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளது. காரணம், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எதிரொலிக்கிறது. இதன் காரணமாக உலக நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில், 5வது முறையாக இந்தியாவில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த தொடர் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உருவாகக்கூடிய சிக்கல்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Follow Us