குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கு விதிக்கப்படும் அபராதம் ரத்து – கனரா வங்கி அதிரடி
Change in Canara Bank Rules : பிரபல பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி, அனைத்து விதமான சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை விதிமுறை ஜூன் 1, 2025 அன்று முதல் ரத்து செய்துள்ளது. அதன் படி குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை மீறினால் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது.

பிரபல பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி (Canara Bank) தனது அனைத்து வகையான சேமிப்பு கணக்குகளுக்கும் (Savings Accounts) குறைந்தபட்ச மாத இருப்புத் தொகைக்கான விதிமுறையை 2025, ஜூன் 1 முதல் முழுமையாக நீக்குவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு, வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் மாணவர்கள், முதியவர்கள் சம்பளக் கணக்காளர்கள் மற்றும் முதல் முறையாக வங்கி சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், அதிக நன்மைகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. அரசு சேவைகளுக்காக முதன்முறையாக வங்கி கணக்கு துவங்கியிருக்கும் எளிய மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை அறிவித்துள்ளது. இனி அவர்கள் குறைந்தபட்ச தொகை விதியை பின்பற்றவில்லை என்றாலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது.
குறைந்தபட்ச சராசரி மாத இருப்புத் தொகை
சேமிப்பு கணக்கில் மாதம் முழுவதும் ஒரு குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற வங்கிகள் ஒரு தொகையை நிர்ணயித்திருக்கின்றன. இந்த நிலைத்தொகையை வாடிக்கையாளர் வங்கியில் வைத்திருக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த முறை வங்கிக்கு வங்கி மாறுபடும். முன்னதாக, கனரா வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கின் வகையைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட அளவிலான சராசரி மாத இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனைப் பின்பற்றாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.




இனி குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கு அபராதம் இல்லை!
Feel the freedom, bank the difference.
Starting 1st June 2025, Canara Bank offers no penalty on non-maintenance of minimum balance.
Applicable to all Savings Bank Account holders!#CanaraBank #YourAccountYourFreedom #PenaltyWaiver pic.twitter.com/fAALUO80MZ
— Canara Bank (@canarabank) June 1, 2025
இந்த நிலையில் கனரா வங்கியின் புதிய அறிவிப்பின் அடிப்படையில், ஜூன் 1, 2025 முதல் அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் அபராதம் விதிக்கப்படாது என அறிவித்துள்ளது. இது தொடர்பாக கனரா வங்கியின் அறிவிப்பில் , இனி அனைத்து வகை சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காததற்கான அபராதம் விதிக்கப்டாது னவவும். வாடிக்கையாளர்கள் சுதந்திரமாக கணக்குகளை வைத்திருக்கலாம் எனவும் தெரிவித்தது.
வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள்:
இந்த புதிய கொள்கை, வங்கியின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த நிவாரணமாக இருக்கும். குறிப்பாக ஓய்வூதியர்கள், மாத சம்பளம் பெறுபவர்கள், மாணவர்கள், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஆகியோருக்கு மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. இனி குறைந்தபட்ச இருப்புத் தொகை குறித்த கவலையில்லாமல் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
கனரா வங்கியின் வளர்ச்சி
கடந்த 2025 மார்ச் 31 அன்று முடிவடைந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், கனரா வங்கி ரூ.5,002.66 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் (ரூ.3,757.23 கோடி) ஒப்பிடும் போது 33.15 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதைக் காட்டுகிறது.மொத்த வட்டி வருமானம் ரூ.31,002.04 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டின் ரூ.28,807.35 கோடியைவிட 7.62 சதவிகிதம் உயர்ந்துள்ளது.