AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காமெனியின் மறைவு.. வெளியுறவுச் செயலாளர் ஈரான் தூதரை சந்தித்து இரங்கல் தெரிவிப்பு..

இந்த நடவடிக்கை, இதுவரை தாக்குதலை நேரடியாக கண்டிக்காமல் அமைதியாக இருந்த டெல்லியின் நிலைப்பாட்டில் ஒரு மெல்லிய மாற்றமாகக் கருதப்படுகிறது. காமெனெய் உயிரிழந்த தாக்குதலை கண்டித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்தியா முதலில் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் இருந்தது.

காமெனியின் மறைவு.. வெளியுறவுச் செயலாளர் ஈரான் தூதரை சந்தித்து இரங்கல் தெரிவிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 05 Mar 2026 17:16 PM IST

மார்ச் 5, 2026: ஈரான் நாட்டின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்தியா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்று வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஈரான் தூதரகத்தை சந்தித்து காமெனி மறைவுக்கான இரங்கல் பதிவேட்டில் கையெழுத்திட்டார். ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா–இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களுக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு டெஹ்ரானில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயத்துல்லா அலி காமெனெய் மறைவு – இந்தியா இரங்கல்:

இந்த நடவடிக்கை, இதுவரை தாக்குதலை நேரடியாக கண்டிக்காமல் அமைதியாக இருந்த டெல்லியின் நிலைப்பாட்டில் ஒரு மெல்லிய மாற்றமாகக் கருதப்படுகிறது. காமெனி உயிரிழந்த தாக்குதலை கண்டித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்தியா முதலில் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் இருந்தது.

இதையடுத்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்ற நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். “இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா எப்போதும் பேச்சுவார்த்தையும் தூதரக முயற்சிகளையும் ஆதரித்து வந்துள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இந்தப் பதில், ஜி7 ஜனநாயக நாடுகளின் நிலைப்பாட்டுடன் ஒத்ததாக உள்ளது. அந்த நாடுகளும் இதுவரை தனிப்பட்ட இரங்கல் அறிக்கை வெளியிடவில்லை.

மேலும் முக்கிய அம்சங்கள்:

  • இந்தியாவுக்கும் ஈரானுக்கும் பல ஆண்டுகளாக வலுவான வர்த்தக மற்றும் அரசியல் உறவுகள் இருந்து வருகின்றன.

  • ஒருகாலத்தில் இந்தியா தனது மொத்த எண்ணெய் தேவையின் சுமார் 13 சதவீதத்தை ஈரானிலிருந்து இறக்குமதி செய்து வந்தது.

  • ஆனால், அமெரிக்கா ஈரானுக்கு விதித்த பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு இந்தியா–ஈரான் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது.

  • குறிப்பாக அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிய பிறகு இந்த தடைகள் மேலும் கடுமையாகியதால் எண்ணெய் இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டது.

  • இருப்பினும், சபஹார் துறைமுகம் (Chabahar Port) போன்ற முக்கிய திட்டங்களில் இந்தியா–ஈரான் ஒத்துழைப்பு தொடர்ந்து இருந்து வருகிறது.

  • மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றம் உலகளாவிய எண்ணெய் சந்தைகளையும் பாதுகாப்பு சூழலையும் பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

  • இந்த சூழ்நிலையில், அந்தப் பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மை அவசியம் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.

Follow Us