AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மறைந்த ஆண் பாம்புவுக்கு துக்கம் அனுசரிக்கும் பெண் பாம்பு – வைரல் வீடியோ

Viral Video : மனிதர்களைப் போல யானைகளும் தங்கள் கூட்டத்தில் யானைகள் இறந்தால் ஒன்று கூடி துக்கம் அனுசரிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றன. சமீபத்தில் வைரலாகும் வீடியோவில் மத்திய பிரதேசத்தில் இறந்த ஆண் பாம்பின் இழப்பை தாங்க முடியாமல் பெண் பாம்பு அப்படியே நிற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மறைந்த ஆண் பாம்புவுக்கு துக்கம் அனுசரிக்கும் பெண் பாம்பு – வைரல் வீடியோ
இறந்த பாம்புக்காக துக்கம் அனுசரிக்கும் பெண் பாம்பு
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Sep 2025 21:58 PM IST

ஒரு யானை (Elephant) விபத்துக்குள்ளாக இறந்தால், யானைக் கூட்டமே அங்கு செல்கிறது.  இருப்பினும், பாம்பு இறந்தால் மற்ற பாம்புகள் அழும் சம்பவத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா..? ஆம், இதுபோன்ற ஒரு காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பொதுவாக, மனிதர்கள் இறந்தால், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கூடி துக்கத்தை அனுசரிப்பது வழக்கம். இதேபோல், சில வகையான விலங்குகளில் இதுபோன்ற துயர சம்பவங்களை நாம் தொடர்ந்து காண்கிறோம். ஒரு குரங்கு இறந்தால், பல குரங்குகள் அதைச் சுற்றி தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அதேபோல், ஒரு காகம் இறந்தாலும், அனைத்து காகங்களும் ஒன்று கூடுவைத நம்மால் பார்க்க முடியும்.

இதேபோல், காட்டு விலங்குகளும் அவ்வாறே செய்கின்றன. அவ்வப்போது யானைகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. ஒரு யானை விபத்துக்குள்ளாக இறந்தால், முழு யானைக் கூட்டமும் அங்கு சென்று தங்கள் துக்கம் அனுசரிக்கின்றன.

இதையும் படிக்க : அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்ற நபர்.. விடாமல் துரத்திய யானை.. வைரல் வீடியோ!

ஆண் பாம்பின் இறப்பை தாங்காத பெண் பாம்பு

யானையின் மரணத்திற்கு மனிதர்கள் காரணமாக இருந்தால், அவற்றைப் பழிவாங்கவும் முயற்சிக்கின்றன. இருப்பினும், பாம்புகள் இறந்தால் மற்ற பாம்புகள் துக்கம் அனுசரிக்கும் சம்பவத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா..? ஆம், அப்படி ஒரு காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு ஆண் பாம்பு இறந்த நிலையில், அதன் உடல் முன் பெண் பாம்பு அசையாமல் நிற்கிறது. துக்கம் தாங்க முடியாமல் அது அப்படி அசையாமல் இருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

வைரலாகும் வீடியோ

 

இதையும் படிக்க : சிங்கத்துடன் போட்டோ எடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி – வைரலாகும் வீடியோ

மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரியில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு, ஒரு பாம்பு ஜேசிபி இயந்திரத்தால் நசுக்கப்பட்டது. அதன் பிறகு, ஒரு பெண் பாம்பு இறந்த பாம்பின் அருகே அமர்ந்து மணிக்கணக்கில் அழுகிறது. பெண் பாம்பு மணிக்கணக்கில் அசையாமல் உயிரற்ற பாம்பின் அருகே அமர்ந்திருந்தது. இந்த ஆண் மற்றும் பெண் பாம்பு ஜோடி கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக ஒன்றாக இருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதைப் பார்த்த மக்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள். அவர்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Follow Us