விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டம்…செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்!

Vijay Public Meeting Update: ஈரோட்டில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பாக அந்தக் கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டம்...செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்!

ஈரோடு விஜய் மக்கள் சந்திப்பு புதிய தகவல்

Published: 

09 Dec 2025 14:06 PM

 IST

ஈரோடு மாவட்டத்தில் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை ) தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக அனுமதி கேட்டு கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் மனு அளித்திருந்தனர். இதற்காக விஜயமங்கலம் பகுதியில் உள்ள பெருந்துறை பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் போலீசார், தவெக நிர்வாகிகள் ஆகியோர் மேற்கண்ட இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) ஆய்வு மேற்கொண்டனர்.

காவல் துறை சார்பில் 84 விதிமுறைகள் அளிப்பு

இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரான கே. ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோட்டில் நடைபெற இருக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக்காக அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த நிகழ்ச்சிக்காக காவல்துறை தரப்பிலிருந்து 84 விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: புதுச்சேரி அரசிடம் தமிழக அரசு பாடம் கற்க வேண்டும்…தவெக தலைவர் விஜய் கடும் தாக்கு!

சுமார் 25 ஆயிரம் பேருக்கு அனுமதி

ஈரோட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது, தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தின் மீது நின்று பேச உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 25 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒவ்வொரு மாவட்டமாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

தவெக இரு முக்கிய புள்ளிகள் இணைகின்றனரா

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு தங்களது கருத்துக்களை கூற உரிமை உள்ளது. இவையெல்லாம் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் எப்படி எல்லாம் கூட்டணி அமையும் என்பது அந்த நேரத்தில்தான் தெரியவரும். தமிழக வெற்றிக் கழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் மற்றும் அதிமுக உரிமை மீட்பு குழு ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இணைய உள்ளனரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் என்று தெரிவித்தார். இதே போல, கே. ஏ. செங்கோட்டையனின் அண்ணன் மகன் அ தி மு க வில் இணைந்தது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

மேலும் படிக்க: முதல்வர் பதவியில் விஜய் உறுதியாக அமருவார்…புஸ்ஸி ஆனந்த்!

Follow Us
Related Stories
திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது – கருத்துக்கணிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து..
வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை..
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை..
உழைப்பாளர் தினம்.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
மே 2-ஆம் தேதி 8 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
சென்னை மெட்ரோ ரயிலில் முக்கிய மாற்றம்.. நாளை முதல் சிங்கார சென்னை அட்டை மட்டுமே செல்லுபடியாகும்..
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..