AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு: வாகன கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Tiruchendur Murugan Temple Kumbhabhishekam: திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருடாந்திர குடமுழுக்கு விழா 2025 ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 முதல் 6.50 மணி வரை நடைபெறுகிறது. இதை ஒட்டி ஏழு நாட்கள் யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்க ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு: வாகன கட்டுப்பாடுகள் அறிவிப்பு
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்குImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 05 Jul 2025 06:47 AM IST

திருச்செந்தூர் ஜூலை 05: திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா (Tiruchendur Murugan Temple Consecration Ceremony) 2025 ஜூலை 7ஆம் தேதி காலை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 2025 ஜூலை 5, 6, 7 ஆகிய நாட்களில் பக்தர்களின் பெருமளவு திரள்வை கருத்தில் கொண்டு போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் (Traffic restrictions) விதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி, உவரி, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூருக்கு வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு தடை (Ban on light goods vehicles) செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. தனியார் வாகனங்கள் மாற்றுப்பாதைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோயிலில் வருடாந்திர குடமுழுக்கு விழா வரும் 2025 ஜூலை 7, 2025 அன்று நடைபெற உள்ளது. இந்த விழா காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இவ்விழா பெரும் பக்தி, பரவசத்துடன் அனுசரிக்கப்படுகிறது. திருக்கோவில் மூலவருக்கு திருப்பணி செய்யப்பட்ட பின்னர், புனித தீர்த்தக் குடத்துடன் யாகசாலை நீர் கொண்டு வரும் இந்த குடமுழுக்கு நிகழ்வுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கபப்டுகிறது.

யாகசாலையில் வேத பண்டிதர்கள் தலைமையில் தினமும் மூன்று காலம் ஹோமங்கள், சிறப்பு யாகங்கள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் யாகசாலை தரிசனம் செய்து, தீபம் ஏற்றி நன்மை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஞ்சாமிர்த அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட விழாக்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன.

விழாவை முன்னிட்டு வாகன கட்டுப்பாடுகள் அறிவிப்பு

இந்த மூன்று நாட்களில் அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றும் வாகனங்களைத் தவிர்த்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, உவரி, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு செல்லும் அனைத்து இலகுரக மற்றும் கனரக சரக்கு வாகனங்களும் தடைசெய்யப்படுகின்றன. பொதுமக்கள், இந்த தடைப்பகுதியில் பயணம் செய்வதை தவிர்த்து மாற்றுப்பாதைகளில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்

மேலும், ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்செந்தூரை வழித்தடமாகக் கொண்டு பயணம் செய்யும் தனியார் வாகனங்களும், அதேபோல் திருச்செந்தூரை கடந்து செல்லும் வாகனங்களும், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பரமன்குறிச்சி வழி ஆகியவற்றை தவிர்த்து மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் வாகன போக்குவரத்து கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேரத்திற்கு முன் வருகை தரவும், ஒழுங்காக தரிசனம் செய்யவும் கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திரண்டுவரும் இவ்விழா பக்தி பரவசத்துடன் நடைபெற இருக்கிறது.

பொதுமக்கள் மற்றும் பயணிகள் அனைவரும், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்து அமைதியான மற்றும் பாதுகாப்பான திருவிழா நடைபெற உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Follow Us