AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“திமுகவினரின் ஆதங்கத்தில் நியாயம் உள்ளது”.. விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!

தற்போதைய அரசியல் சூழலில் விசிக தோழர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது என்று கேட்டுக்கொண்ட திருமாவளவன், பின்வரும் கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, ஆ. ராசா அவர்களை எதிர்த்து விசிகவினர் யாரும் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கக் கூடாது. திமுகவுக்கு எதிராக எவ்விதமான தேவையற்ற விமர்சனங்களையோ அல்லது போராட்டங்களையோ விசிகவினர் நடத்தக் கூடாது.

“திமுகவினரின் ஆதங்கத்தில் நியாயம் உள்ளது”.. விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!
திருமாவளவன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 May 2026 11:38 AM IST

சட்டசபை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவளித்த விசிக அரசியல் நிலைப்பாடு, அதன் நீண்டகாலக் கூட்டணியான திமுகவினர் இடையே பெரும் அதிருப்தியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோரின் காட்டமான விமர்சனங்கள் இரு கட்சித் தொண்டர்களிடையே தற்காலிகப் பதற்றத்தை உருவாக்கிய சூழலில், விசிக தலைவர் தொல். திருமாவளவன்  சமரச நகர்வை மேற்கொண்டுள்ளார்.  இந்த விவகாரம் இரு கட்சித் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது கட்சித் தொண்டர்களுக்கு வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்களை இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

இதையும் படிக்க: பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.. முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்..

திமுக தொண்டர்களின் மனித இயல்பு:

விசிக எடுத்துள்ள அரசியல் முடிவு குறித்து திருமாவளவன் பேசுகையில், “நாம் எடுத்த இந்த முடிவை திமுக தரப்பில் ஆ.ராசா உட்பட பலர் விமர்சிக்கிறார்கள் என்கிற போது, அது நமக்குச் சற்று வலி அளிப்பதாகத்தான் இருக்கிறது. என்றாலும் கூட, அவர்கள் நம் மீது ஆதங்கப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதாவது, திமுகவைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிற த.வெ.க.வோடு நாம் கைகோர்ப்பதை அல்லது அவர்களோடு களத்தில் நிற்பதை, அல்லது அவர்களுக்கு ஆதரவு அளிப்பதை அவ்வளவு எளிதாக எப்படி ஒரு திமுக தொண்டரால் கடந்து செல்ல முடியும்? இது மனித இயல்புதான்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை:

மேலும், விசிகவை நோக்கி திமுகவினர் கடும் சொற்களால் விமர்சனம் செய்யக் கூடாது என்று திமுக தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகத் திருமாவளவன் சுட்டிக்காட்டினார். அத்துடன், விசிகவுக்கு எதிராகப் போடப்பட்ட சமூக வலைத்தளப் பதிவுகளை உடனடியாக நீக்கும்படி ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதையும் நாம் அறிவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போராட்டங்களை கைவிட உத்தரவு:

தற்போதைய அரசியல் சூழலில் விசிக தோழர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது என்று கேட்டுக்கொண்ட திருமாவளவன், பின்வரும் கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, ஆ. ராசா அவர்களை எதிர்த்து விசிகவினர் யாரும் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கக் கூடாது. திமுகவுக்கு எதிராக எவ்விதமான தேவையற்ற விமர்சனங்களையோ அல்லது போராட்டங்களையோ விசிகவினர் நடத்தக் கூடாது.

மேலும் படிக்க: “டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்கு திரும்ப அழைப்பு”.. ஜூன் மாத இறுதிக்குள் மாற்றம்.. அமைச்சர் கொடுத்த உறுதி!!

ஆக்கப்பூர்வமான பணிகள்:

இந்த தற்காலிக அரசியல் விவாதங்களைக் கடந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் அனைவரும் தங்களது கவனத்தை ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் செலுத்த வேண்டும். திருமாவளவனின் இந்த அதிரடி மற்றும் பக்குவமான அறிக்கை, இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வந்த தற்காலிக வன்முறை மற்றும் பதற்றமான சூழலைத் தணிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Follow Us