AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக வானிலை அறிக்கை: அடுத்த சில தினங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையின் ஒருசில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசாததால் மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

தமிழக வானிலை அறிக்கை: அடுத்த சில தினங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
கோப்புப் புகைப்படம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 07 Apr 2026 14:35 PM IST

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னையின் முக்கிய பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தற்போது நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகத் தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு ஆங்காங்கே மழை நீடிக்க வாய்ப்புள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை ஒருசில இடங்களில் இயல்பை விட 3° செல்ஸியஸ் வரை அதிகரிக்கக்கூடும். கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசாததால் மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர வானிலை நிலவரம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாகப் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாகச் சென்னையின் சைதாப்பேட்டை மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவிய நிலையில், காரைக்கால் பகுதியில் மிக லேசான மழை பதிவானது. சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாகக் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் 23.6° செல்ஸியஸும், மலைப்பகுதிகளில் ஊட்டியின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 11.4° செல்ஸியஸும் பதிவாகியுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பாதை மற்றும் மழை முன்னறிவிப்பு

தற்போது மேற்கு வங்கம் முதல் மன்னார் வளைகுடா வரை, சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, 2026 ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் வட கடலோரத் தமிழக மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 2026 ஏப்ரல் 9 முதல் 10 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை நீடிக்கக்கூடும். குறிப்பாக, 2026 ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை மாற்றம் மற்றும் சென்னை வானிலை

வெப்பநிலையைப் பொறுத்தவரை, அடுத்த சில நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்ஸியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். ஈரோட்டில் அதிகபட்சமாக 40° செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36° செல்ஸியஸை ஒட்டி இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us