உஷார் மக்களே.. சென்னை டூ தென்காசி.. அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் எனவும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உஷார் மக்களே.. சென்னை டூ தென்காசி.. அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!

மழை

Updated On: 

18 Jul 2025 14:43 PM

சென்னை, ஜூலை 18 : தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (Tamil Nadu Weather Forecast) தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் கனமழை (Chennai Rains) பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி எடுத்தும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.  இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.  இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2025 ஜூன் 18ஆம் தேதி நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, திண்டுக்கல், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 ஜூலை 19,20ஆம் தேதிகளில் நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read : சென்னையில் இரவு நேரங்களில் பெய்யும் மழை.. கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..

அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை


2025 ஜூலை 21ஆம் தேதி நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 2025 ஜூலை 22ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read : அடுத்த ஒரு வாரம்.. வெளுக்கப்போகும் கனமழை.. சென்னையில் எப்படி? வானிலை மையம் அலர்ட்!

சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூலை 18,19ஆம் தேதிகளில் நகரின் ஒருசில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 -26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.