AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பள்ளி மாணவர்களுக்கென சூப்பர் முயற்சி… முதுமலை புலிகள் காப்பகத்தில் முகாம்..!

Mudumalai Tiger Reserve: முதுமலை புலிகள் காப்பகத்தில் மாணவர்களுக்கு இயற்கை மற்றும் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. மசினகுடி, சீகூர் உள்ளிட்ட பகுதிகளில் பேரணி, பயிற்சி மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கு யானைகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் விளக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கென சூப்பர் முயற்சி… முதுமலை புலிகள் காப்பகத்தில் முகாம்..!
முதுமலை புலிகள் காப்பகம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 30 Mar 2026 13:28 PM IST

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டத்திற்குட்பட்ட மசினகுடி, சிங்காரா, சீகூர் மற்றும் நீலகிரி கிழக்கு சரிவு சரகம் ஆகிய வனச்சரகங்களின் சார்பில் மாணவர்களுக்கான வன உயிரின மற்றும் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாம்களின் மூலம் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து நேரடியாக விளக்கப்படுவதுடன், வனவிலங்குகள் வாழும் சூழலை பாதுகாக்கும் பொறுப்பு குறித்து உணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக இயற்கை வளங்களின் குறைவு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவான விழிப்புணர்வு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மசினகுடி பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

மசினகுடி வனச்சரகம் சார்பில் மாயார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி தெப்பகாடு பகுதியில் நடத்தப்பட்டது. மேலும் மசினகுடி, பொக்காபுரம் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வுகளில் மாணவர்கள் இயற்கை பாதுகாப்பு தொடர்பான பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு, வன உயிரினங்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டனர்.

சீகூர் வனச்சரகத்தில் பயிற்சி மற்றும் விளக்கம்

சீகூர் வனச்சரகம் சார்பில் ஆனைக்கட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் 45 பேர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சிறியூர் ஹள்ளா ஆற்றோரப் பகுதிகளில் இயற்கை பாதுகாப்பு குறித்து தன்னார்வலர்கள் அருளகம் விளக்கமளித்தனர். இந்த பயிற்சியின் மூலம் மாணவர்கள் இயற்கை வளங்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும், அவற்றின் பயன்பாடு எவ்வாறு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் குறித்து தெளிவான அறிவைப் பெற்றனர்.

யானைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

இதனைத் தொடர்ந்து ஆனைக்கட்டி ஓய்வு விடுதியில் ஊட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி விரிவுரையாளர் ராமகிருஷ்ணன், யானைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். யானைகள் மற்றும் மனிதர்கள் இடையிலான மோதல்களை குறைப்பது, அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பது போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இது மாணவர்களுக்கு வனவிலங்குகளுடன் இணைந்து வாழும் மனப்பாங்கை உருவாக்கும் வகையில் அமைந்தது.

Also Read: தமிழகத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ பரவி பெரும் சேதம்…

நீலகிரி கிழக்கு சரிவு சரக முகாம்

நீலகிரி கிழக்கு சரிவு சரகத்தின் சார்பில் தெங்குமரஹடா அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அல்லிமாயார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வன உயிரினம் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் மாணவர்கள் பல்வேறு செயல்முறை விளக்கங்கள் மூலம் வனவிலங்குகள் மற்றும் இயற்கை சூழலின் பாதுகாப்பு குறித்து அறிவு பெற்றனர்.

மாணவர்களின் உறுதிமொழி மற்றும் பயன்

இந்த விழிப்புணர்வு முகாம்கள் மூலம் மாணவர்களுக்கு வன உயிரினங்கள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், இயற்கை பாதுகாப்பு குறித்த உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. இத்தகைய முயற்சிகள் எதிர்கால தலைமுறையை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட தூண்டும் முக்கியமான அடித்தளமாக அமைகின்றன.

Follow Us