பிச்சு உதறபோகும் கனமழை.. 2 நாட்களுக்கு அலர்ட்.. சென்னையில் வானிலை எப்படி?
Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு டெல்டா, வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை
சென்னை, செப்டம்பர் 11 : தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் (Tamil Nadu Weather) தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் (Chennai Rain) இரு தினங்களுக்கு மிதமான மழையே பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 2025 செப்டம்பர் 11ஆம் தேதியான இன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Also Read : மாறும் வானிலை.. மழை ஒரு பக்கம்.. அதிகரிக்கும் வெப்பநிலை மறுபக்கம்.. ரிப்போர்ட் இதோ..
2 நாட்களுக்கு கனமழை தொடரும்
CHIEF AMOUNT OF RAINFALL (IN CENTIMETERS) FOR TAMILNADU, PUDUCHERRY AND KARAIKAL [FROM 08:30 IST OF 10.09.2025 TO 08:30 IST OF 11.09.2025]https://t.co/2G1wBpBuPm pic.twitter.com/fvIBNpqwCK
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 11, 2025
தொடர்ந்து, 2025 செப்டம்பர் 12ஆம் தேதியான நாளை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read : ரெடியா இருங்க.. இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. முன்னதாக, செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதிக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.