இன்று பிச்சு உதறபோகும் கனமழை.. 10 மாவட்டங்களுக்கு அலர்ட்.. சென்னையில் எப்படி?

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 அக்டோபர் 12ஆம் தேதியான இன்று கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இன்று பிச்சு உதறபோகும் கனமழை.. 10 மாவட்டங்களுக்கு அலர்ட்.. சென்னையில் எப்படி?

தமிழகத்தில் மழை

Updated On: 

12 Oct 2025 06:23 AM

 IST

சென்னை, அக்டோபர் 12 : தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 2025 அக்டோபர் 12ஆம் தேதியான இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இன்னும் ஒருசில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதாவது, அக்டோபர் 18 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் நல்ல மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக, சென்னையில் பலத்த மழை பெய்யலாம் எனவும் கணித்திருக்கிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 அக்டோபர் 12ஆம் தேதி 17ஆம் தேதி தமிழகத்தில் மிதமான மழையும், கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, 2025 அக்டோபர் 12ஆம் தேதியான இன்று கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். 2025 அக்டோபர் 13ஆம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read : தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. பிரதீப் ஜான் கொடுத்த ஹிண்ட்.. எப்போது தெரியுமா?

6 நாட்களுக்கு கனமழை தொடரும்

2025 அக்டோபர் 14ஆம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 2025 அக்டோபர் 15ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கனமழையும், 2025 அக்டோபர் 16ஆம் தேதி கோவை, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read : மழைக்கு ரெடியா? அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் கனமழை.. படிப்படியாக குறையும் வெப்பநிலை..

2025 அக்டோபர் 17ஆம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 அக்டோபர் 12ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.