வெளுக்கப்போகுது… கனமழை லிஸ்டில் இந்த 9 மாவட்டங்கள்.. வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் இன்று (2025 அக்டோபர் 8) முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை
சென்னை, அக்டோபர் 08 : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, தஞ்சை, நாகப்பட்டினம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை மிதமான மழையே பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துளளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையை பொறுத்தவரை, விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். 2025 அக்டோபர் 6ஆம் தேதி வடமேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய சக்தி புயல் தற்போது வலுகுறைந்து காற்றழுத்தத தாழ்வு மண்டலமாக வடமேற்கு அரபிக் கடலில் நிலவுகிறது.
இது துவாரகாவிலிருந்து மேற்கு தென்மேற்கு சுமார் 970 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது மேலும் தென்கிழக்கே மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நகர்ந்து வலுவிழக்க கூடும். தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 அக்டோபர் 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழையும், கனமழையும் பெய்யக் கூடும்.
Also Read : கேப் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. லிஸ்டில் இருக்கும் மாவட்டங்கள் இதோ.. வானிலை மையம் அலர்ட்
கனமழை லிஸ்டில் இந்த 9 மாவட்டங்கள்
அதன்படி, 2025 அக்டோபர் 8ஆம் தேதி கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 அக்டோபர் 9ஆம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
2025 அக்டோபர் 10ஆம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 அக்டோபர் 11,12ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
Also Read : 2 நாட்களுக்கு கனமழை கொட்டும்.. சென்னைக்கு வந்த அலர்ட்.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
சென்னையை பொறுத்தவரை, நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.