மாணவர்களுக்கு குட் நியூஸ்! சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

School Leave : சென்னையில் மோன்தா புயல் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வாரம் நவம்பர் 8, 2025 அன்று பள்ளிகள் செயல்படும்  என அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு குட் நியூஸ்! சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

மாதிரி புகைப்படம்

Updated On: 

07 Nov 2025 20:50 PM

 IST

சென்னையில் மோன்தா புயல் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடுகட்ட பள்ளிகளுக்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் 1, 2025 அன்று பள்ளிகள் செயல்படும் என்று கூறப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வாரம் நவம்பர் 8, 2025 அன்று பள்ளிகள் செயல்படும்  என அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை  (School Leave) அளிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நவம்பர் 8, 2025 அன்று சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மோன்தா புயல்

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16, 2025 அன்று வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், உடனடியாக மோன்தா புயல் உருவானது. இதனையடுத்து தமிழகத்தில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வட தமிழக பகுதிகளில் மட்டும் கனமழை பெய்தது. இந்த ஆண்டின் வடகிழக்கு பருவமழைக்காலத்தின் முதல் புயலான மோன்தா தற்போது ஆந்திராவின் கரையோர பகுதிகளை கடந்ததது. இதனையடுத்து ஆந்திரா மற்றும் ஓடிசா ஆகிய மாநிலங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதையும் படிக்க : அடுத்தடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. நவ.15 பிறகு மீண்டும் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. வானிலை நிலவரம்..

தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக நீர் நிலைகள், அணைகள் எல்லாம் வேகமாக நிரம்பின. மேலும் குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.

தமிழகத்தில் மீண்டும் தீவிரமடையும் மழை

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக அவ்வப்போது விட்டு விட்டு மிதமான முதல் கனமழை பதிவாகி வருகிறது. இதனால் வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்து காணப்படுகிறது. மேலும்  நவம்பர் 15, 2025 அன்று வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : நாளை இந்த 6 மாவட்டங்களுக்கு கனமனழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தற்போது தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நவம்பர் 7, 2025 ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், நவம்பர் 8, 2025 அன்று தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்த நிலையில் நவம்பர் 15, 2025 அன்று முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.