AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரி: வாட்ஸ்அப் மூலம் ரூ.5.10 கோடி மோசடி: 10 பேர் கைது

Puducherry Cyber Crime: புதுச்சேரியில் ₹5.1 கோடி மதிப்புள்ள வாட்ஸ்அப் மோசடி வழக்கில், தனியார் நிறுவன உரிமையாளரைப் போலியாகக் காட்டி மோசடி செய்த குற்றத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சைபர் கிரைம் போலீசார் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து கூடுதலாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி: வாட்ஸ்அப் மூலம் ரூ.5.10 கோடி மோசடி: 10 பேர் கைது
வாட்ஸ்அப் மூலம் ரூ.5.10 கோடி மோசடிImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 01 Jun 2025 09:21 AM IST

புதுச்சேரி ஜூன் 01: புதுச்சேரியில் தனியார் நிறுவன உரிமையாளரை போலியாக காட்டி வாட்ஸ்அப்பில் ரூ.5.10 கோடி மோசடி செய்த குற்றத்தில், இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் மேலும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த நான்கு சந்தேகர்களை கைது செய்து விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். இவர்களிடமிருந்து மோசடி பண பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள், இன்டர்நெட் கனெக்ஷன்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

பல வங்கிக் கணக்குகளில் தவணைகளாக ரூ.5.10 கோடி ரூபாயை மோசடி

இந்த மோசடி வழக்கில், புதுச்சேரி மேட்டுப்பாளையம் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றிய சுகியா, தனது நிறுவனர் உரிமையாளரை போல வாட்ஸ்அப்பில் வந்த அழைப்புக்கு முறையாக நம்பிக்கையுடன் பணம் அனுப்பி இருந்தார். குறித்த நபர் பணம் தேவையென கூறி, பல வங்கிக் கணக்குகளில் தவணைகளாக ரூ.5.10 கோடி ரூபாயை மோசடி கும்பலுக்கு அனுப்பியுள்ளார்.

மோசடி தொடர்பாக கைது செய்யப்படும் குற்றவாளிகள்

பின்னர், வங்கி கணக்குகள் மற்றும் வாட்ஸ்அப் அழைப்புகளை ஆய்வு செய்த போது, உரிமையாளரின் புகைப்படம் பயன்படுத்தி மர்ம நபர்கள் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. மோசடியில் பெறப்பட்ட பணத்தில் ரூ.3 கோடி மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் கிளைக்கு மாற்றப்பட்டு இருந்தது. அங்கு கணக்கு வைத்திருந்த மொபிகுல் ஆலம் மற்றும் அவரது கூட்டாளி நஸீபுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது வரை மோசடி வழக்கில் 10 பேர் கைது

புதுச்சேரியில் ₹5.1 கோடி மதிப்புள்ள வாட்ஸ்அப் மோசடி வழக்கில், தனியார் நிறுவன உரிமையாளரைப் போலியாகக் காட்டி மோசடி செய்த குற்றத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சைபர் கிரைம் போலீசார் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து கூடுதலாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

மேலும், ரூ.1.80 கோடி பணம் செலுத்தப்பட்ட மற்றொரு வங்கி கணக்கு கேரளா, திருவனந்தபுரம் அருகே சரத் என்பவரின் பெயரில் உள்ளது. அவரும் உடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 11 பேருக்கு மேலாகப் பேரை சைபர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உதவி எண்

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

புதுச்சேரி போலீசார் பொதுமக்களை வங்கி கணக்குகள் மற்றும் தொலைபேசி எண்களை கமிஷனுக்காக பிறருக்கு வழங்குவதிலிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு, இது குற்றமாகும் என்பதையும், மோசடியின் இலக்காக இருந்தால் உடனே போலீசாருக்கு புகார் செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், வெளிநாட்டு தொடர்புடையவர்களையும் போலீசார் அடையாளம் கண்டுப்பிடித்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சைபர் கிரைம் போலீசார் தொடர்பு எண்கள்: இலவச தொலைபேசி 1930, இணையதளம் cybercrime.gov.in மற்றும் 0413-2276144 / 9489205246. மோசடி எதிர்ப்பதில் பொதுமக்களின் கவனம் அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow Us