தகராறை தட்டிக் கேட்ட காவலர்.. அரிவாளால் வெட்டிய கும்பல்.. நெல்லையில் பயங்கரம்
Tirunelveli Crime News : திருநெல்வேலி மாவட்டத்தில் காவலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வஉசி மைதானத்தில் தகராறை தட்டிக் கேட்டதால் 5 பேர் கொண்ட கும்பல் காவலரை அரிளாவால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் காயம் அடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவலருக்கு அரிவாளல் வெட்டு
திருநெல்வேலி, ஜூன் 24 : திருநெல்வேலி மாவட்டத்தில் காவலரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகராறை தட்டிக்கேட்ட போது, காவலரை கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த காவலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வஉசி மையதானத்தில் 2025 ஜூன் 23ஆம் தேதி அதிக அளவில் கூட்டம் இருந்தது. அங்கு மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா என்பவர் தனது மனைவி குழந்தை மற்றும் உறவினருடன் அங்கு சென்றிருக்கிறார். ரஹ்மத்துல்லா மணிமுத்தாறு சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். தற்போது நெல்லை மாநகர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
காவலருக்கு அரிவாள் வெட்டு
இந்தநிலையில், குடும்பத்துடன் வஉசி மைதானத்திற்கு ரஹ்மத்துல்லா சென்றிருக்கிறார். அங்கு ஒரு கும்பல் இளைஞர் ஒருவரை சரமாரியாக தாக்கி இருந்ததாக தெரிகிறது. நீண்ட நேரமாக அந்த கும்பல் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளது.
இதனால், ஆத்திரம் அடைந்த ரஹ்மத்துல்லா இதுபற்றி அவர்களிடம் கேட்டிருக்கிறார். இதனை அடுத்து, அந்த கும்பல் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரஹ்மத்துல்லாவின் கையில் வெட்டியது. அதன்பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
அரிவாளால் வெட்டியதில் ரஹ்மத்துல்லா ரத்த வெள்ளத்தில் இருநதுள்ளார். இதனை அடுத்து, அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் பட்டப்பகலில் நடந்த சம்பவம்
இதற்கிடையில், போலீசாரை தாக்கிய மர்ம கும்பலை நெல்லை கிழக்கு பகுதி துணை கமிஷ்னடர் வினத் மற்றும இன்ஸ்பெக்டர்கள் காசி பாண்டியன், பொன்ராஜ் தலைமையில் போலீசார் தீவிரமாக தேடினர். இதில் , பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் அவரது நண்பர்களான மதன், பார்த்திபன் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் பிடித்தனர்.
இந்த 5 பேரை கைது செய்த போலீசார், தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கைதான இந்த கும்பல் மீது ஏற்கனவே கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் காவலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் பலரும் கண்டனம் தெரிவித்தன. மேலும், ரவுடிகளில் ஆராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக, 2025 மார்ச் மாதம் நெல்லையில் ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழக்ததையே உலுக்கியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.