Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஊட்டி மலர் கண்காட்சி: 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் மு.க. ஸ்டாலின்

Ooty Flower Show 2025: ஊட்டி மலர் கண்காட்சி 2025 மே 15 முதல் மே 25 வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் 2025 மே 12 முதல் 16 வரை 5 நாள் பயணமாக ஊட்டி செல்கிறார். கோவை வழியாக ஊட்டிக்கு சென்று, மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஊட்டி மலர் கண்காட்சி: 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் மு.க. ஸ்டாலின்
ஊட்டிக்கும் பயணம் மேற்கொள்ளும் முதல்வர் மு.க. ஸ்டாலின்Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 12 May 2025 07:09 AM IST

நீலகிரி மே 12: ஊட்டி மலர் கண்காட்சி (Ooty Flower Show) 2025 மே 15-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் (CM Stalin Ooty Visit) 2025 மே 12 இன்று 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்கு செல்லவுள்ளார். அவர் கோவை வழியாக ஊட்டிக்கு சென்று, அந்த வழியில் கோத்தகிரி, கட்டப்பெட்டு இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 2025 மே 15-ந் தேதி, அவர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, மலர் அலங்காரங்களை பார்வையிடுவார். நிகழ்வுக்கு 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 2025 மே 16-ந் தேதி, அவர் சென்னை (Chennai) திரும்புவார்.

ஊட்டி மலர் கண்காட்சி: 5 நாட்கள் ஊட்டியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி 2025 மே 15 முதல் மே 25 வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் 2025 மே 12 முதல் 16 வரை 5 நாள் பயணமாக ஊட்டி செல்கிறார். கோவை வழியாக ஊட்டிக்கு சென்று, மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோடை விழாவின் ஒரு பகுதியாக, கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய இடங்களில் ஏற்கனவே காய்கறி மற்றும் வாசனை திரவிய கண்காட்சிகள் நடைபெற்றன. இந்த கண்காட்சியின் முன்னிட்டு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 5 நாட்கள் ஊட்டிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.

கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி

நீலகிரி மாவட்டம் ஊட்டி, அதன் வசதியான காலநிலையை அனுபவிக்க தமிழ் மாநிலம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தோட்டக்கலைத் துறை ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு, கோடை விழா 2025 மே 3-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. பின்னர், கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும் 3 நாட்கள் நடந்தது. தற்போது, ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடைபெற்றுவரும் நிலையில், 2025 மே 15-ந் தேதி இருந்து சர்வதேச மலர் கண்காட்சி தொடங்குகிறது.

முதல்வரின் ஊட்டி பயணம்

முதல்வர் மு.க. ஸ்டாலின் 2025 மே 12 இன்று சென்னையில் இருந்து கோவை விமானமாக சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக ஊட்டிக்கு செல்கிறார். வழக்கமாக கோத்தகிரி, கட்டப்பெட்டு உள்ளிட்ட இடங்களில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.

ஊட்டியில், முதல்வர் விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்து, பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். 2025 மே 15-ந் தேதி, அவர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, மலர் அலங்காரங்களை பார்வையிடுவார். 2025 மே 16-ந் தேதி, அவரது சுற்றுப்பயணம் முடிந்து, சென்னை திரும்புவார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

முதல்வரின் வருகையை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு, 1,000 போலீசாரைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது.