மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!

Tirunelveli Crime : திருநெல்வேலி மாவட்டத்தில் மது போதையில் கொடூரமாக தாக்கிய மகனிடம் இருந்து தன்னை தற்காத்து கொள்வதற்காக கத்தியால் மகனின் நெஞ்சில் குத்தியதில் அவர பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!

மகனை கொலை செய்ததாக தாய் கைது

Published: 

10 Mar 2026 12:34 PM

 IST

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே உள்ளது கிருஷ்ணாபுரம் கிராமம். இந்த பகுதியில் உள்ள தனலட்சுமி நகரை சேர்ந்தவர் கண்ணன் ( 60 வயது) . இவரது மனைவி லதா ( 56 வயது). இவர்களுக்கு மாயாண்டி ( 27 வயது) என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர். கண்ணன் மற்றும் மாயாண்டி இருவரும் இணைந்து அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாயாண்டிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால், அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து தனது தாய் மற்றும் தந்தை ஆகியவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவாராம். இந்த நிலையில், வழக்கம் போல நேற்று ( மார்ச் 9 ) நள்ளிரவு மாயாண்டி அதிகளவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, மாயாண்டியிடம் அவரது தாய் லதா கண்டித்ததாக தெரிகிறது. இதில், கோபமடைந்த மாயாண்டி தனது தாயிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மகனை கத்தியால் நெஞ்சில் குத்திய தாய்

ஒரு கட்டத்தில் தனது தாய் என்றும் பாராமல் லதாவை, மாயண்டி கொடூரமாக தாக்கி உள்ளார். இதில், லதா நிலை குலைந்து கீழே விழுந்தார். அப்போதும், லதாவை மாயாண்டி தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், கீழே இருந்து எழுந்த லதா அருகில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மாயாண்டியின் நெஞ்சு பகுதியில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில், அவரது நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மாயாண்டி சரிந்து விழுந்தார். உடனே, அருகில் இருந்தவர்களை வரவழைத்து மாயாண்டியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் கடற்கரை திருமணமா… அதுவும் குறைந்த கட்டணத்திலா… அட ஆமாங்க.. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!

ஆபத்தான நிலையில் இருந்தவர் பரிதாப பலி

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மாயாண்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, மாயாண்டியின் சடலம் உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவந்திப்பட்டி காவல் ஆய்வாளர் ராபர்ட் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகனை கொலை செய்த தாயால் பரபரப்பு

மேலும், மாயாண்டியின் தாய் லதாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மது போதையில் கொடூரமாக தாக்கிய மகனிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக தாய் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: நடிகைக்கு காதல் தொல்லை.. இயக்குநர் திட்டமிட்டு படுகொலை.. இன்ஸ்டாவால் நேர்ந்த விபரீதம்!!

Follow Us
Related Stories
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
சென்னை எழும்பூரில் வரப்போகுது மெகா அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்… எப்போது தெரியுமா?
20 நாட்களுக்கான கையிருப்பில் வீட்டு சிலிண்டர்கள்.. விற்றுத் தீர்ந்த வணிக சிலிண்டர்கள்.. சென்னையில் ஹோட்டல்கள் மூடல்..
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..