AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamilnadu Weather: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கொட்டப்போகும் கனமழை!

Rain Alert for Tamil Nadu: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, மே 8-ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை சில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டாலும், வரும் மே 4 முதல் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamilnadu Weather: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கொட்டப்போகும் கனமழை!
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புImage Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 02 May 2026 14:50 PM IST

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, மே 8-ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை சில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டாலும், வரும் மே 4 முதல் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு 40° செல்சியஸ் வரை வெப்பம் நீடிப்பதோடு அதிக ஈரப்பதம் காரணமாகப் புழுக்கம் நிலவும். வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மே 4 வரை மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாவட்ட வாரியான கனமழை எச்சரிக்கை மற்றும் முன்னறிவிப்பு

மேற்கு ராஜஸ்தான் முதல் குமரிக்கடல் வரை நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் மே 2 முதல் மே 8 வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக மே 2-ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் ஈரோடு, சேலம், திருச்சி மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலும் மழை நீடிக்கும். மே 8-ஆம் தேதி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கி.மீ வேகம்) கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை மாற்றம் மற்றும் அசௌகரியமான வானிலை நிலவரம்

கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயில், மழையின் வருகையால் சற்று தணியத் தொடங்கியுள்ளது. இருப்பினும், வேலூரில் 42.0° செல்சியஸ் என்ற உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரும் மே 4 முதல் மே 6 வரை வெப்பநிலையானது 2-3° செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மே 4 வரை நிலவும் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக, கடலோர தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் பொதுமக்களுக்கு உடல் ரீதியான அசௌகரியங்கள் (வியர்வை மற்றும் புழுக்கம்) ஏற்பட வாய்ப்புள்ளது.

தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் வானிலை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 40° செல்சியஸை எட்டும் என்பதால் வெயிலின் தாக்கம் உணரப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸாக இருக்கும். மழையை விட, காற்றில் நிலவும் அதிக ஈரப்பதமே சென்னை மக்களுக்குச் சற்று சிரமத்தைக் கொடுக்கும் எனத் தெரிகிறது.

Also Read: கோடையில் எந்த குடிநீர் பருகலாம்…? மண்பானை நீரா? ஃப்ரிட்ஜ் நீரா?

மீனவர்களுக்கான எச்சரிக்கை மற்றும் கடல் பகுதி நிலவரம்

தமிழக மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. ஆனால், வங்கக்கடல் பகுதிகளில் குறிப்பாக வட ஆந்திரா மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால் மே 4-ஆம் தேதி வரை மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மே 5 முதல் கடல் சீற்றம் தணிந்து மீனவர்களுக்குச் சாதகமான சூழல் நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.

Follow Us