Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் தொடரும் வெயிலும் மழையும்… கனமழை எப்போது?

Heatwave Continues in Tamil Nadu: தமிழ்நாட்டில் கடும் வெயிலுக்கு இடையே சில பகுதிகளில் இடியுடன் மழை பெய்து நிவாரணம் அளிக்கிறது. அக்னி நட்சத்திரம் தொடரும் நிலையில் வெப்பம் மேலும் அதிகரித்து, 2–3 டிகிரி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தென் மேற்கு பருவக்காற்று 2025 மே 13-ல் தொடங்கி, சில மாவட்டங்களில் 2025 மே 13–15ல் கனமழை ஏற்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் தொடரும் வெயிலும் மழையும்… கனமழை எப்போது?
தமிழகத்தில் தொடரும் வெயிலும் மழையும்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 12 May 2025 14:00 PM IST

சென்னை, மே 12: தமிழ்நாட்டில் (Tamilnadu Weather) கடும் வெயிலுக்கு இடையே சில இடங்களில் இடியுடன் மழை பெய்து நிவாரணம் (Rain alert) தருகிறது. சென்னை (Chennai) உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பம் 100 டிகிரியை எட்ட, மதுரை, பாளையங்கோட்டை போன்ற மாவட்டங்களில் 104 டிகிரி வரை பதிவானது. அக்னி நடுச்சத்திரம் முடிந்தாலும் வெப்பம் தொடரும் நிலையில், கடல் பகுதியில் காற்றழுத்த மாற்றத்தால் மழை வாய்ப்பு உருவாகியுள்ளது. தென் மேற்கு பருவக்காற்று 2025 மே 13-இல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 2025 மே 13–15ல் பல மாவட்டங்களில் கனமழை இருக்கலாம். மாநிலத்தில் வெப்பநிலை மேலும் 2–3 டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சென்னையில் வெயிலும் மழையும்

தமிழ்நாட்டில் கடும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அவ்வப்போது பெய்யும் இடியுடன் கூடிய மழை கொஞ்சம் குளிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. நேற்று 2025 மே 11 சென்னை பகுதியில் கடும் வெயிலுக்கு நடுவே சில இடங்களில் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் சற்று நிவாரணம் பெற்றனர். இன்று 2025 மே 12 இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரியை எட்டக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

104 டிகிரியைத் தொட்ட மாவட்டங்கள்

மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று 104 டிகிரியில்வரை வெப்பநிலை பதிவானது. வேலூர், திருத்தணியில் 102 டிகிரி; சென்னை, கடலூர், புதுச்சேரியில் 100 டிகிரி; சேலம், பரங்கிப்பேட்டை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 99 டிகிரி வெப்பநிலை நிலவியது.

அக்னி நட்சத்திரம் தொடரும் நிலையில் வரும் பருவமழை

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) ஒரு வாரமாக முடிந்து வரும் நிலையில், வெப்பம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியப் பெருங்கடல், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த மாறுபாடு ஏற்பட்டதால் மழை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தென் மேற்கு பருவக்காற்று விரைவில் தொடங்கும்

தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவுகள் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் நாளை (2025 மே 13) தென் மேற்கு பருவக்காற்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கத்தை விட இரண்டு நாட்கள் முன்னதாக கேரளாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்

2025 மே 13ஆம் தேதி நீலகிரி, கோவை மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். 2025 மே 14, 15 ஆகிய தேதிகளில் நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின் பேரில், 2025 மே 13ஆம் தேதிவரை தமிழகத்தில் வெப்பநிலை சாதாரண நிலையைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.