AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக அரசு தொடங்கிய அகழாய்வு பணிகளை இந்த அரசும் தொடர வேண்டும் – மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..

MK Stalin Request To Government: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், "தொடர்ந்து வழிபடும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்; தடங்கல் எது வரினும் வரலாற்று உண்மையை நிறுவுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக அரசு தொடங்கிய அகழாய்வு பணிகளை இந்த அரசும் தொடர வேண்டும் – மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Jul 2026 14:49 PM IST

ஜூலை 14, 2026: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட அகழாய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, கீழடி அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கு அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் சொன்ன விஷயம்:

இந்தச் சூழலில், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டிருந்தார். அதில், “திமுக அரசால் தொடங்கப்பட்டு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி தொல்லியல் அகழாய்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டு, அங்கு கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் குறித்து தொல்லியல் ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தேன்.

Also Read: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை தொடரும்… உள் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்!

வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை தன்னகத்தே கொண்டுள்ள தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி அகழாய்வு, கீழடி மற்றும் ஆதிச்சநல்லூரைப் போல தமிழ்நாட்டின் பண்டைய வரலாற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சும் முக்கியமான அகழாய்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழர் நாகரிகத்தின் வரலாறையும், தமிழ்நாட்டின் தொன்மையையும் உலகிற்கு அறிவியல் அடிப்படையில் எடுத்துரைக்கும் இதுபோன்ற தொல்லியல் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

அகழாய்வு பணிகள் தொடர வேண்டும் – மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்:

இதனைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், “தொடர்ந்து வழிபடும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்; தடங்கல் எது வரினும் வரலாற்று உண்மையை நிறுவுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் தனது பதிவில், “திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளை புதிய அரசு தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தளங்களை உலகறியச் செய்ய வேண்டும். தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த்தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை!

மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்! வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம்!” என தெரிவித்துள்ளார்.

Follow Us