முதல்வர் விஜய்யின் கரூர் பேச்சு – திமுக தரப்பில் சிபிஐயிடம் புகார்
கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக திமுக சிபிஐயிடம் புகாரளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் பேசியதும் அவரது செயல்களும் சிபிஐ விசாரணையை பாதிக்கும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிபிஐயிடம் புகார் மனு அளித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முதல்வர் விஜய் - ஆர்.எஸ்.பாரதி
கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக திமுக சிபிஐயிடம் புகாரளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் பேசியதும் அவரது செயல்களும் சிபிஐ விசாரணையை பாதிக்கும் என திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.41 பேர் மரணத்துக்கு திமுகவும் காவல்துறையும் காரணம் என முதல்வர் விஜய் பேசியிருந்தார்.இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள புகார் மனுவில் முதல்வர் விஜய் மீது வழக்குப்பதிவ செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow Us