AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய்க்கு ஆதரவு: அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 25 பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா?

Disqualification Risk Looms: மூன்றில் இரண்டு பங்கு பலம் இல்லாததால் அதிருப்தி குழுவினர் தனி அணியாக அங்கீகரிக்கப்பட வாய்ப்பில்லை என்பதால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை பாயக்கூடும். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்த கொறடாவின் உத்தரவை மீறியது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் நிலையில், சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தாமதித்தால் நீதிமன்றம் தலையிட வாய்ப்புள்ளது.

விஜய்க்கு ஆதரவு: அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 25 பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா?
சி.வி.சண்முகம் ஆதரவு அதிமுகவினர்
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 14 May 2026 10:44 AM IST

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவின் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின்படி (கட்சித் தாவல் தடைச் சட்டம்), ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பிரிந்தால் மட்டுமே அவர்கள் தகுதி நீக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். ஆனால், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணியினரிடம் அந்தப் பெரும்பான்மை இல்லை என்பது எடப்பாடி பழனிச்சாமி (EPS) தரப்பின் வாதமாக உள்ளது.

கொறடா உத்தரவும் சிவசேனா வழக்கு முன்னுதாரணமும்

மகாராஷ்டிராவின் சிவசேனா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தச் சூழலில் மிக முக்கியமானது. ஏக்நாத் ஷிண்டே தரப்பிடம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இருந்ததால் அவர்கள் தப்பித்தனர். ஆனால், தற்போது அதிமுகவில் அதிருப்தி குழுவினரிடம் அத்தகைய பலம் இல்லாததால், அவர்கள் தனிக்குழுவாக அங்கீகரிக்கப்பட வாய்ப்பில்லை. கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நியமித்த கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவே இறுதியானது. அந்த உத்தரவை மீறி வாக்களித்த 25 எம்.எல்.ஏ-க்களும் சட்டப்படி தகுதி நீக்கத்திற்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளனர்.

சபாநாயகரின் அதிகாரம் மற்றும் நீதிமன்றத்தின் தலையீடு

இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சபாநாயகரிடம் புகார் அளிக்கும்போது, அரசியல் காரணங்களால் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தாமதப்படுத்த வாய்ப்புள்ளது. இருப்பினும், தெலங்கானா மாநில வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடலாம். சபாநாயகர் தொடர்ந்து மௌனம் காத்தால், நீதிமன்றமே தகுதி நீக்க விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

தேர்தல் ஆணையம் மற்றும் உட்கட்சிப் பூசல்

தகுதி நீக்க நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, அதிருப்தி குழுவினர் தேர்தல் ஆணையத்தை நாடி “நாங்களே உண்மையான அதிமுக” என்று உரிமை கோரலாம். இது போன்ற சூழலில், மீண்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்படும். அதே நேரத்தில், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளதால், அவர்கள் பொதுக்குழுவில் தங்கள் பலத்தை நிரூபிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்சி விதிகளின்படி, பொதுக்குழுவில் இபிஎஸ் தனது செல்வாக்கை மீண்டும் உறுதி செய்யும் பட்சத்தில், அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே அமையும்.

Follow Us