AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“திமுக முதுகில் குத்திய காங்கிரஸ், முதல்வர் விஜய் முதுகிலும் குத்தும்” .. தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை!

மேலும், தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், "மற்றொரு கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன், 'நாங்கள் இன்னும் பழைய (திமுக) கூட்டணியில்தான் இருக்கிறோம், ஆனால் இந்த (தவேகா) அமைச்சரவையிலும் இருக்கிறோம்' என்கிறார். அமைச்சரவையில் சேருவதில் விருப்பம் இல்லை என்றும் கூறுகிறார்

“திமுக முதுகில் குத்திய காங்கிரஸ், முதல்வர் விஜய் முதுகிலும் குத்தும்” ..  தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை!
தமிழிசை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 May 2026 13:51 PM IST

“திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சி, தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் முதுகிலும் குத்தத் தயங்காது; எனவே அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் பேசிய காரசாரமான விபரங்கள் பின்வருமாறு, “திமுகவின் முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டதாக நேற்று திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். உண்மையில், மற்றவர்களின் முதுகில் குத்துவதுதான் காங்கிரஸின் பழக்கம்; அவர்களின் சரித்திரமே அப்படித்தான். எனவே, முதலமைச்சர் விஜய் அவர்கள் காங்கிரஸ் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திமுக முதுகில் குத்திய காங்கிரஸ், முதலமைச்சர் விஜயின் முதுகிலும் குத்துவதற்கு எந்தவிதத்திலும் தயக்கம் காண்பிக்காது” என்று தமிழிசை சௌந்தரராஜன் எச்சரித்துள்ளார்.

புறவாசல் வழியாக அமைச்சரவையில் நுழைவு:

தொடர்ந்து பேசிய அவர், “பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களின் சுய முயற்சியால் அமைச்சரவையில் சேர்ந்துவிட்டதைப் போலக் காங்கிரஸ் கட்சியினர் தற்போது கொண்டாடி வருகிறார்கள். ஆனால், மற்றவர்களின் உழைப்பின் மேல் ஏறி நின்று கொண்டு, புறவாசல் வழியாகத்தான் தவேகா (தமிழ்நாடு வெற்றிக் கழகம்) அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. காங்கிரஸிற்குத் தனிப்பட்ட கட்டமைப்பு எதுவும் இல்லை என்றும், தங்களால்தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்றும் திமுகவே நேற்று சுட்டிக்காட்டியுள்ளது” எனக் கடுமையாகச் சாடினார்.

காங்கிரஸின் இரட்டை வேடம்:

“இன்று காங்கிரஸ் கட்சி என்ன சொல்கிறது என்றால், ‘எங்களின் வெற்றியில் திமுகவிற்குப் பங்கு இல்லை; அதேசமயம் திமுக செய்த குற்றங்களிலும் எங்களுக்குப் பங்கு இல்லை’ என்கிறார்கள். திமுகவின் ஆதரவோடு சட்டமன்ற உறுப்பினர்களாகவும் (MLAs), நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் (MPs) வெற்றி பெற்றுவிட்டு, இப்போது திமுக செய்த குற்றங்களில் எங்களுக்குப் பங்கு இல்லை என்று அவர்கள் எப்படிச் சொல்ல முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

கூட்டணிக் கட்சிகளின் நிச்சயமற்ற தன்மை:

மேலும், தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், “மற்றொரு கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன், ‘நாங்கள் இன்னும் பழைய (திமுக) கூட்டணியில்தான் இருக்கிறோம், ஆனால் இந்த (தவேகா) அமைச்சரவையிலும் இருக்கிறோம்’ என்கிறார். அமைச்சரவையில் சேருவதில் விருப்பம் இல்லை என்றும் கூறுகிறார், அதேநேரம் அமைச்சரவையிலும் சேருகிறார். இதன் மூலம் மக்களுக்கு நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்? தற்போதைய அரசியல் சூழலில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. எனவே, இந்த அரசாங்கம் மக்களுக்கு ஒரு தெளிவான தன்மையை விளக்க வேண்டும்” என்று தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us