AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ்நாட்டில் இந்த இருமல் மருந்துக்கு தடை.. மக்களே உஷார்!

Coldrif Cough Syrup: மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 9 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழந்த அதிர்ச்சி நிகழ்வைத் தொடர்ந்து, கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. சிறுநீரக செயலிழப்பே மரணத்திற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இந்த இருமல் மருந்துக்கு தடை.. மக்களே உஷார்!
இருமல் மருந்து
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 03 Oct 2025 11:43 AM IST

தமிழ்நாடு, அக்டோபர் 3: மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்து 9 குழந்தைகள் உயிரிழந்ததாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் கோல்ட்ரிஃப் எனப்படும் இருமல் மருந்து தொடர்புபடுத்தப்பட்டதாக ஊடக அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விற்பனையைத் தடைசெய்து மாநில மருந்துக் கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த ஆணையத்தின் துணை இயக்குநர் எஸ். குருபாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்து ஆய்வாளர்களும் மருந்தகங்கள் மூலம் கோல்ட்ரிஃப் விற்பனையைத் தடுக்கவும், கிடைக்கக்கூடிய இடங்களில் மறு உத்தரவு வரும் வரை அவற்றை முடக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9 குழந்தைகளின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் கோல்ட்ரிஃப் மருந்தின் ஒரே தொகுப்பிலிருந்து ஒன்று மற்றும் அதே உற்பத்தியாளரால் தயாரிக்கப்பட்ட வெவ்வேறு சேர்க்கைகளைக் கொண்ட நான்கு மருந்துகளின் ஐந்து மாதிரிகள் அவற்றின் அலகுகளிலிருந்து எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Also Read: விஜய்யின் பரப்புரைக்கு தடை விதிங்க ; காயமடைந்த நபர் நீதிமன்றத்தில் மனு  – அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்

இந்த இருமல் மருந்து சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து புதுச்சேரி, ஒடிசா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வழங்கப்படுவதால், மருந்து விற்பனையைத் தடுக்க அந்த மாநிலங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக குருபாரதி கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் நடந்தது என்ன?

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக பதினைந்து நாட்களுக்குள் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் பருவகால காய்ச்சலின் சாதாரண நிகழ்வுகளாகத் தோன்றிய இருமல் இப்போது கொடிய நோயாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பரிசோதனை செய்தபோது குறைந்தது ஐந்து பேர் கோல்ட் ரெஃப் மருந்தை எடுத்துக் கொண்டது தெரிய வந்தது. மேலும் ஒரு குழந்தை நெக்ஸ்ட்ரோ சிரப் குடித்துள்ளது. மாசுபட்ட இருமல் சிரப்பை உட்கொண்டதால் சிறுநீரக செயலிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. எனினும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட ஆய்வு முடிவுகள் வந்த பிறகு உண்மை நிலவரம் தெரிய வரும் என சொல்லப்படுகிறது.

Also Read: இருமல் மருந்தால் 2 குழந்தைகள் பலி.. சோதனை செய்த மருத்துவருக்கு நேர்ந்த சோகம்.. நடந்தது என்ன?

அண்டை மாநிலமான ராஜஸ்தானிலும் இதுபோன்ற இறப்பு பதிவான நிலையில் அனைத்து மாநிலங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள், மருத்துவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, ​​சளி, காய்ச்சல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட 1,420 குழந்தைகளின் உடல்நிலை மத்தியப்பிரதேச சுகாதாரத் துறையால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இரண்டு நாட்களுக்கு மேல் நோய்வாய்ப்பட்ட எந்தவொரு குழந்தையும் சிவில் மருத்துவமனையில் ஆறு மணி நேரம் கண்காணிப்பில் வைக்கப்படும். நிலை மோசமடைந்தால், குழந்தை மாவட்ட மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படும். நிலை சீரானவுடன், அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us