AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சொந்த தொகுதியான பெரம்பூருக்கு செல்லும் முதல்வர் விஜய்.. 45,000 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள்.. புகார்களை தீர்க்க புதிய செயலி அறிமுகம்!

தமிழக முதலமைச்சர் விஜய் நாளை தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு நேரில் செல்கிறார். அங்கு புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைப்பதுடன், மக்களின் குறைகளைத் தீர்க்கும் பிரத்தியேக செயலி மற்றும் 45,000 பயனாளிகளுக்குப் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

சொந்த தொகுதியான பெரம்பூருக்கு செல்லும் முதல்வர் விஜய்.. 45,000 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள்.. புகார்களை தீர்க்க புதிய செயலி அறிமுகம்!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 12 Jul 2026 07:30 AM IST

சென்னை, ஜூலை 12: தமிழக முதலமைச்சரும் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜய், நாளை (ஜூலை 13, திங்கட்கிழமை) தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு நேரில் சென்று பல்வேறு முக்கிய மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகத் தனது சொந்த தொகுதிக்கு அவர் வருகை தருவதால், தொகுதி மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அமித்ஷா எனக்கு போன் செய்தார், ஏன் தெரியுமா?”.. அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே திருமாவளவன் ஓப்பன் டாக்!!

தேர்தல் பின்னணி:

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாகப் பெரும்பான்மை பெற்று புதிய அரசைக் கட்டிலில் அமர்த்தியது. இந்தத் தேர்தலில் அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். சட்ட விதிகளின்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால், அவர் திருச்சி கிழக்கு தொகுதி பதவியைத் துறந்து, சென்னை பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக நீடித்து வருகிறார்.

இந்நிலையில், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகத் தனது சொந்த தொகுதிக்குச் செல்லும் இந்த வருகையின் போது நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் திட்டங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதிநவீன வசதிகளுடன் MLA அலுவலகம் திறப்பு:

பெரம்பூர் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்கும் மையமாகத் திகழும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பொதுமக்களுக்குத் தேவையான பல்வேறு நவீன வசதிகளுடன் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ளது. இந்த அலுவலகத்தை நாளை திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் முதலமைச்சர் விஜய் நேரில் சென்று திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர உள்ளார். பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காக எளிதாகத் தொடர்புகொள்ளும் வகையில் இந்த அலுவலகம் இனி செயல்படும்.

முதல்வர் அலுவலகத்துடன் இணைய புதிய ‘செயலி’:

பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களின் குறைகள், புகார்கள் மற்றும் கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பிப்பதற்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய மொபைல் செயலி ஒன்று இந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தச் செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால், பொதுமக்கள் இதில் பதிவேற்றும் புகார்கள் அனைத்தும் ஒரு பிரத்தியேக இணையக் கட்டுப்பாட்டு அறை வழியாக நேரடியாக முதலமைச்சர் அலுவலகத்தின் தனிப்பட்ட கவனத்திற்குச் செல்லும். இதன் மூலம் தொகுதியின் முக்கியப் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

45,000 பயனாளிகளுக்குப் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்:

அரசு நலத்திட்டங்களின் முக்கியப் பகுதியாக, பெரம்பூர் தொகுதியில் புதிதாக குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்திருந்த தகுதியுடைய சுமார் 45,000 பயனாளிகளுக்குப் புதிய ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கும் பணிகளை முதலமைச்சர் விஜய் அவர்கள் தொடங்கி வைக்கிறார். நியாயவிலைக் கடைகள் மூலமாக இந்த அட்டைகளைப் பயனாளிகள் பெற்றுக் கொள்வதற்கான அரசாங்கத் திட்டத் தொடக்க விழாவும் இதனுடன் இணைந்து நடைபெறுகிறது.

தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி அறிவிப்பு:

தன்னைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து, தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் அமர வைத்த பெரம்பூர் தொகுதி மக்களுக்கு இந்த மேடையில் முதல்வர் விஜய் அவர்கள் நேரில் நன்றி தெரிவிக்க உள்ளார். பொதுமக்களைச் சந்தித்து உரையாடும் வகையில் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: “என் வாழ்நாளில் மறக்க முடியாத ஆறாத வடு கரூர் சம்பவம்!”.. முதல்வர் விஜய் ஆவேச பேச்சு!!

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் வருகையை ஒட்டி பெரம்பூர் தொகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் முதலமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க நகரின் முக்கியச் சந்திப்புகளில் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

Follow Us