AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கான பாசனத்தேவை.. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு..

மேட்டூர் அணை நீர் திறக்க 90 அடி அளவுக்கு நீர் இருக்க வேண்டும் என்ற நிலையில், தற்போது 79.62 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதேபோல், அணைக்கு வரும் நீர்வரத்து 424 கனஅடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்த காரணத்தினால், இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்கப்படவில்லை. 

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கான பாசனத்தேவை.. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Jun 2026 08:00 AM IST

ஜூன் 13, 2026: தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பாசன தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய மூன்று அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளின் பாசனத் தேவைகள் பூர்த்தியாகும் என விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு:

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தாமிரபரணி பாசனப் பகுதிகளில் உள்ள நெல்லை மாவட்டத்தின் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கீழ் உள்ள மருதூர் மேலக்கால்வாய், தென்கால்வாய் மற்றும் வடக்கால்வாய் ஆகிய ஒன்பது கால்வாய்களின் கீழ் உள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்காக ஜூன் 15 முதல் அக்டோபர் 13 வரை 121 நாட்களுக்கு, 6086.83 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தேவைக்கேற்ப அணைகளில் உள்ள நீர் இருப்பைப் பொருத்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடரும் மிதமான மழை.. வெப்பநிலை எப்படி இருக்கும் ?

இதன் மூலம் நெல்லை மாவட்டத்தின் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நெல்லை மற்றும் பாளையங்கோட்டை உள்ளிட்ட வட்டங்கள் மற்றும் கிராமங்கள், தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட வட்டங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள 36 ஆயிரத்து 521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்திறப்பு – விவசாயிகள் ஏமாற்றம்:

இது ஒரு பக்கம் இருக்க, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய நீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேட்டூர் அணையின் நீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை பாசனத்திற்காக நீர் திறக்கப்படுவது வழக்கம். அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் குருவை பாசனத்திற்காக நீர் திறக்கப்படும்.

மேலும் படிக்க: மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இல்லை – லட்சக்கணக்கான விவசாயிகள் ஏமாற்றம்

நீர் திறக்க 90 அடி அளவுக்கு நீர் இருக்க வேண்டும் என்ற நிலையில், தற்போது 79.62 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதேபோல், அணைக்கு வரும் நீர்வரத்து 424 கனஅடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்த காரணத்தினால், இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்கப்படவில்லை. இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Follow Us